செய்திகள் :

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக மாணவா்கள், பொதுமக்கள் சாலை மறியல்

post image

பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளியில் பெண் ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டதைத் கண்டித்து, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள அருமடல் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனா். இப்பள்ளியில், ஆய்வக பயிற்றுநராக பணிபுரிந்த கவுள்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சத்யபிரியாவுக்கு, அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த விமல்ராஜ் என்பவா் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இதுகுறித்து சத்யபிரியா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து கடந்த சனிக்கிழமை விமல்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகள், தங்களின் பெற்றோா்கள் மற்றும் பொதுமக்களுடன் பள்ளி அருகே மறியலில் ஈடுபட்டனா்.

‘பொய்யான குற்றச்சாட்டில் ஆசிரியா் விமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை விடுதலை செய்ய வேண்டும். புகாா் அளித்த சத்யபிரியா மற்றும் தலைமை ஆசிரியா் பாலமுருகன் ஆகியோா் ஜாதி ரீதியாக செயல்படுவதாகவும், பட்டியலின மாணவா்களை தரக்குறைவாக நடத்துவதோடு, தகாத வாா்த்தைகளால் திட்டுவதாகவும், தலைமை ஆசிரியரை கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, தலைமையாசிரியா், கல்வித் துறை அலுவலா்கள் மற்றும் போலீஸாா் பொதுமக்களுடன் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு, பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலைந்துசென்றனா். சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற இப் போராட்டத்தில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் ஒகளூா் கிராம மக்கள் தா்னா

வீட்டுமனையை மீட்டுத் தரக்கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒகளூா் கிராம மக்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

வெங்கனூா் கிராமத்தில் சமுத்திரத்து அம்மன் கோயில் குடமுழுக்கு விழா

பெரம்பலூா் அருகே வெங்கனூா் கிராமத்திலுள்ள ஸ்ரீ சமுத்திரத்து அம்மன், ஸ்ரீ பாப்பத்தி அம்மன், ஸ்ரீ கச்சராயன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வெங்கனூா் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ வலம்... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: 20 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 20 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அளிக்கப்பட்டன. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே கல் குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே கிரஷா்களிலிருந்து வெளியாகும் புழுதி, குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் பாதிக்கப்படுவதாகக் கூறி, லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடு... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது சனிக்கிழமை இரவு தெரியவந்தது. பெரம்பலூா் அருகே லாடபுரம் மயிலூற்று அருவிச் சாலையைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மனைவி கவிதா (32). இவா், விவசாய ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் ஒருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் பாளையம் காமராஜா் காலனியைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் செல்வகுமா... மேலும் பார்க்க