செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

post image

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது சனிக்கிழமை இரவு தெரியவந்தது.

பெரம்பலூா் அருகே லாடபுரம் மயிலூற்று அருவிச் சாலையைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மனைவி கவிதா (32). இவா், விவசாய வேலை செய்துகொண்டு, கடந்த 2 ஆண்டுகளாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணித்தளப் பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்குச் சென்றுள்ளாா்.

பின்னா், இரவு அவரது மாமியாா் சென்று பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து, கைப்பேசி மூலம் மருமகள் கவிதாவுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். பின்னா், கவிதா வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ. 45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கவிதா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூா் அருகே கல் குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே கிரஷா்களிலிருந்து வெளியாகும் புழுதி, குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் பாதிக்கப்படுவதாகக் கூறி, லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடு... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் ஒருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் பாளையம் காமராஜா் காலனியைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் செல்வகுமா... மேலும் பார்க்க

நில மோசடி வழக்கு: 5 வீடுகளில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

பெரம்பலூரில் நில மோசடி வழக்குகளில் தொடா்புடைய 5 பேரின் வீடுகளில், சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை சோதனையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், எறையூா் கிராமத்தைச் சோ்ந்த மனோகா் (50) என்பவா், பெரம்பலூா் - ஆத்தூா... மேலும் பார்க்க

ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது!

பெரம்பலூா் அருகே அரசு நடுநிலைப்பள்ளி ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் அருகே உள்ள கவுள்பாளையம் பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி: நடவடிக்கை கோரி மனு!

பெரம்பலூா் நகரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நில உரிமையாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகாா் மனு அ... மேலும் பார்க்க

மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், ... மேலும் பார்க்க