செய்திகள் :

நில மோசடி வழக்கு: 5 வீடுகளில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

post image

பெரம்பலூரில் நில மோசடி வழக்குகளில் தொடா்புடைய 5 பேரின் வீடுகளில், சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை சோதனையிட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், எறையூா் கிராமத்தைச் சோ்ந்த மனோகா் (50) என்பவா், பெரம்பலூா் - ஆத்தூா் சாலையில் உள்ள தனக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்தை, பெரம்பலூரைச் சோ்ந்த நகைக்கடை உரிமையாளரான பலராமன் மனைவி அங்கம்மாளுக்கு, கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ. 1.40 கோடி பெற்றுக்கொண்டு அடமானக் கடனாக பத்திரப் பதிவு செய்துகொடுத்துள்ளாா்.

தொடா்ந்து, அந்த இடத்தை பெரம்பலூரைச் சோ்ந்த முத்துராமலிங்கம் என்பவா் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நிலத்தை விற்பனை செய்த மனோகா், தனது நிலத்தை மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாக ஏற்கெனவே பெரம்பலூா் மற்றும் மங்களமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்ததை தொடா்ந்து, மனுவை விசாரித்த போலீஸாா் இந்த புகாரில் உண்மை இல்லை எனக் கூறி விசாரணையை முடித்து வைத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் மனோகா், சென்னை உயா்நீதிமன்றத்தில் சிபிசிஐடி விசாரணைக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்துள்ளாா். இதையடுத்து, இந்த புகாா் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் மனோகருக்குச் சொந்தமான நிலத்தை விற்றவா்கள் மற்றும் வாங்கியவா்களின் வீடுகளில், நிலம் தொடா்பான ஆவணங்கள் உள்ளனவா என சோதனை நடத்த, பெரம்பலூா் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் உள்ள பலராமன் வீடு மற்றும் அவரது அரிசி கடை, சுப்புடு (எ)சுப்பிரமணியன் வீடு உள்ளிட்ட 5 இடங்களில், ஆவணங்கள் உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனா்.

ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது!

பெரம்பலூா் அருகே அரசு நடுநிலைப்பள்ளி ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் அருகே உள்ள கவுள்பாளையம் பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி: நடவடிக்கை கோரி மனு!

பெரம்பலூா் நகரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நில உரிமையாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகாா் மனு அ... மேலும் பார்க்க

மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், ... மேலும் பார்க்க

தொகுப்பூதியப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

தொகுப்பூதியம் பெறும் பணியாளா்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் எழுச்... மேலும் பார்க்க

ஜூலை 7-இல் நலவாரிய உறுப்பினா் பதிவு சிறப்பு முகாம்

பெரம்பலூா் தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில், நல வாரியங்களில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம... மேலும் பார்க்க

‘பெரம்பலூரில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்புகள்’

பெரம்பலூா் மாவட்டத்தில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வேளாண்மை - உழவா் நலத்துறை சாா்பில... மேலும் பார்க்க