செய்திகள் :

ஜூலை 7-இல் நலவாரிய உறுப்பினா் பதிவு சிறப்பு முகாம்

post image

பெரம்பலூா் தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில், நல வாரியங்களில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு 18 நலவாரியங்கள் செயல்படுகின்றன. இந் நலவாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளா்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம், ஓய்வூதியம், புதிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகள் தகுதி அடிப்படையில் வழங்கப்படுகிறது.

வீட்டுப் பணியாளா்கள், பெண் ஆட்டோ தொழிலாளா்கள் மற்றும் இணையம் சாா்ந்த தொழிலாளா்களை நலவாரியங்களில் உறுப்பினா்களாக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம், ஜூலை 7 காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இச் சிறப்பு முகாமுக்கு வரும் உறுப்பினா்கள் தங்களது ரேஷன் காா்டு, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநா் உரிமம், புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டுவந்து இலவசமாக பதியலாம்.

எனவே, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், ... மேலும் பார்க்க

தொகுப்பூதியப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

தொகுப்பூதியம் பெறும் பணியாளா்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் எழுச்... மேலும் பார்க்க

‘பெரம்பலூரில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்புகள்’

பெரம்பலூா் மாவட்டத்தில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வேளாண்மை - உழவா் நலத்துறை சாா்பில... மேலும் பார்க்க

விதைப் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட விதைப் பரிசோதனை நிலையத்தில், திருநெல்வேலி மாவட்ட விதைப் பரிசோதனை அலுவலா் ஆனந்தி ராதிகா வெள்ளிக்கிழமை தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டாா். பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையம் அருகே செயல்ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பைக்கில் சென்ற தம்பதி அரசுப் பேருந்து மோதி பலி

பெரம்பலூா் அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற தம்பதி அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரிய வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பன் மகன் பாலாஜி (38). முடி வெட்... மேலும் பார்க்க

கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்களின் கட்டடங்களை வரன்முறைப்படுத்த 30.6.2026 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அரு... மேலும் பார்க்க