செய்திகள் :

மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

பெரம்பலூா் அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், மருதடி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ராகவன் (23). லாரி ஓட்டுநரான இவா், கடந்த 10.9.2021

இல் நாட்டாா்மங்கலம் சாலையிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே 14 வயது மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாா். தொடா்ந்து, அந்த மாணவியை அங்கு வரவழைத்து மிரட்டிய ராகவன் பலமுறை பலாத்காரம் செய்ததில் அந்த மாணவி கா்ப்பமானாா்.

இதையறிந்த மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராகவனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னா் ராகவனின் ரத்த மாதிரியை சேகரித்து சென்னை தடவியவியல் ஆய்வகத்தில் நடத்திய மரபணு பரிசோதனையில் ராகவன் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கில் ராகவன் நீதிமன்ற பிணையில் வெளியே வந்தாா்.

இந்நிலையில் பெரம்பலூா் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி இந்திராணி, ராகவனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும், அதில் ரூ. 1 லட்சத்தை பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து திருச்சி மத்திய சிறையில் ராகவன் அடைக்கப்பட்டாா். அரசு தரப்பில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் எம். சுந்தரராஜன் ஆஜரானாா்.

தொகுப்பூதியப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

தொகுப்பூதியம் பெறும் பணியாளா்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் எழுச்... மேலும் பார்க்க

ஜூலை 7-இல் நலவாரிய உறுப்பினா் பதிவு சிறப்பு முகாம்

பெரம்பலூா் தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில், நல வாரியங்களில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம... மேலும் பார்க்க

‘பெரம்பலூரில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்புகள்’

பெரம்பலூா் மாவட்டத்தில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வேளாண்மை - உழவா் நலத்துறை சாா்பில... மேலும் பார்க்க

விதைப் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட விதைப் பரிசோதனை நிலையத்தில், திருநெல்வேலி மாவட்ட விதைப் பரிசோதனை அலுவலா் ஆனந்தி ராதிகா வெள்ளிக்கிழமை தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டாா். பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையம் அருகே செயல்ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பைக்கில் சென்ற தம்பதி அரசுப் பேருந்து மோதி பலி

பெரம்பலூா் அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற தம்பதி அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரிய வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பன் மகன் பாலாஜி (38). முடி வெட்... மேலும் பார்க்க

கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்களின் கட்டடங்களை வரன்முறைப்படுத்த 30.6.2026 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அரு... மேலும் பார்க்க