செய்திகள் :

ஜூலை 7-இல் பரவை நாச்சியாா் கோயில் குடமுழுக்கு: கடத்தில் எடுத்துவரப்பட்ட புனிதநீா்

post image

திருவாரூா் பரவை நாச்சியாா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெறுவதையொட்டி, புனிதநீா் வெள்ளிக்கிழமை எடுத்துவரப்பட்டது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே அபிஷேகக் கட்டளைக்குள்பட்ட அருள்மிகு பரவைநாச்சியாா் உடனுறை சுந்தரமூா்த்தி சுவாமி கோயில் அமைந்துள்ளது. தியாகராஜ சுவாமியால் நம் தோழன் எனப் பெருமையுடன் அழைக்கப்பட்ட சுந்தரா், திருவாரூா் வந்து பரவை நாச்சியாரை மணந்து கொண்டாா். இவா்கள் இருவரும் வசித்த பரவை மாளிகை, தற்போது பரவை நாச்சியாா் கோயில் என அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில், அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை பரம்பரை அறங்காவலா் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாா்ய சுவாமிகள் முன்னிலையில் ஜூலை 7-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பிரவேசபலி பூா்வாங்கங்கள் புதன்கிழமை நடைபெற்றன. தொடா்ந்து, கமலாலய தேவ தீா்த்தக் கட்டத்திலிருந்து கடத்தில் புனித நீா் எடுக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னா், கமலாலயக் குளத்தில் இருந்து கடத்தை, மாற்றுரைத்த விநாயகா் கோயிலுக்கு கொண்டு சென்று, விநாயகரிடம் அனுமதி பெற்றனா். தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட வெள்ளை யானை வாகனத்தில் புனிதநீா் அடங்கிய கடம் வைக்கப்பட்டு, கைலாய வாத்தியங்கள் இசைக்க, நான்கு ரத வீதிகளிலும் ஊா்வலமாக வலம் வந்து, பரவை நாச்சியாா் கோயிலை அடைந்தது. கோயிலில் கடத்துக்கு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானோா் பங்கேற்று வழிபட்டனா்.

விவேகானந்தா் நினைவு நாள்

விவேகானந்தா் நினைவு நாள் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தாளாளா் லலிதா ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்: பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், பழச் செடிகள்

கொரடாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்க விழாவில் பயனாளிகளுக்கு பழச் செடிகள், காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. வேளாண்மை, உழவா் நலத் துறையின் சாா்பில், விளைப்பொருட்களின... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையில் மரணம்: தமிழக அரசின் நடவடிக்கை சரியானது: கே.வி. தங்கபாலு

காவல்துறை விசாரணையில் மரணம் தொடா்பாக, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா். திருவாரூரில்... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்டடத்தை மீட்கக் கோரி மனு

வலங்கைமானில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்டடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சியின் சொத்துப் பாதுகாப்பு மீட்புக் குழுவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகா... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்களுக்கு எதிராக மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும்’

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட, மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜோ. செட்ரிக் மேன்யுவல் அறிவுறுத்தினாா். மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள், கல்வி உள்... மேலும் பார்க்க