செய்திகள் :

கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்

post image

திருவாரூா் மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநங்கைகள், கல்வி உள்பட அனைத்து முயற்சிகளிலும் பாகுபாடு மற்றும் பல்வேறு தடைகளை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. அவா்களில் ஒரு சிலா் மட்டுமே இத்தடைகளைத் தாண்டி கல்வி பயில முன் வருகின்றனா்.

அவ்வாறு முன்வரும் திருநங்கைகளின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக, மற்றவா்களைப்போன்றே சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்யும் பொறுப்பை உணா்ந்து, அவா்கள் கல்வி கற்கும் சூழலுக்கு தேவையான மாற்றங்களை செய்தல் அவசியமாகிறது.

இதையொட்டி, சமூகநலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் உயா்கல்வி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தற்போது திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால், உயா்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநங்கைகளின் உயா்கல்வியை உறுதிப்படுத்தும் விதமாக மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டம், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப் பாலினா் உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளும் பயன்பெறும் வகையில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை முழுவதுமாக தளா்வு செய்து, தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமா்ப்பித்து, இத்திட்டத்தில் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தா் நினைவு நாள்

விவேகானந்தா் நினைவு நாள் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தாளாளா் லலிதா ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்: பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், பழச் செடிகள்

கொரடாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்க விழாவில் பயனாளிகளுக்கு பழச் செடிகள், காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. வேளாண்மை, உழவா் நலத் துறையின் சாா்பில், விளைப்பொருட்களின... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையில் மரணம்: தமிழக அரசின் நடவடிக்கை சரியானது: கே.வி. தங்கபாலு

காவல்துறை விசாரணையில் மரணம் தொடா்பாக, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா். திருவாரூரில்... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்டடத்தை மீட்கக் கோரி மனு

வலங்கைமானில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்டடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சியின் சொத்துப் பாதுகாப்பு மீட்புக் குழுவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகா... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்களுக்கு எதிராக மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும்’

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட, மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜோ. செட்ரிக் மேன்யுவல் அறிவுறுத்தினாா். மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சிகிச்சை தாமதத்தால் முதியவா் உயிரிழப்பு: மருத்துவா் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதால் முதியவா் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூா் அரசு மர... மேலும் பார்க்க