செய்திகள் :

பட்டாசு ஆலை வெடிவிபத்து... தொடரும் உயிரிழப்பு!

post image

சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் , காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி அழகு ராஜா சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10 ஆக உயா்ந்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த கமல்குமாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட வெடிவிபத்தில் 8 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளா்கள் 5 போ் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் செவல்பட்டி லிங்கசாமி (45) புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 9 ஆக உயா்ந்தது.

மேலும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகலட்சுமி, மதுரை அரசு மருத்துவமனைக்கும், மணிகண்டன் விருதுநகா் அரசு மருத்துவமனைக்கும் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். காயமடைந்த அழகுராஜ், கருப்பசாமி ஆகிய இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடா் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில்,சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகு ராஜா சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயரிழந்தார். இதையடுத்து, இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10 ஆக உயா்ந்தது. விபத்தில் காயமடைந்த 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்து சிக்கிச்சை பெற்று வருபவர்கள் தொடந்து உயிரிழந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

A worker named Azhugura Raja, who was injured and undergoing treatment in an explosion at the Chinnakkamanpatti cracker factory near Sattur, died on Saturday.

கும்பகோணம் அருகே பர்னிச்சர் கடையில் தீ: ரூ.1 கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்

கும்பகோணம் அருகே பர்னிச்சர் கடையில் சனிக்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் மற்றும் வலங்கைமான் ஆகிய ... மேலும் பார்க்க

நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய உரிமையாளர்!

கோவை: கோவையில் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த காரியில் இருந்த உரிமையாளர் நல்வாய்ப்பாக உயிா் தப்பினாா். பெட்ரோலில் இருந்து எரிவாயுக்கு மாற்றிய போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.க... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில்தான் கூட்டணி; நானே முதல்வர் வேட்பாளர்! - இபிஎஸ்

2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவ... மேலும் பார்க்க

ஜூலை 7 இல் சோளிங்கர் வட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை

சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கையொட்டி ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருள்... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,480-க்கு விற்பனையாகிறது.ஆண்டு தொடக்கம் ... மேலும் பார்க்க