செய்திகள் :

இது டிரைலர்தான்! எங்களைச் சேர்த்தது மகாராஷ்டிர முதல்வர்! - ராஜ் தாக்கரே பேச்சு

post image

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் எங்களை மீண்டும் இணைத்துள்ளதாக மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநில பள்ளிகளில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக சிவசேனை(யுபிடி) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் இணைந்துள்ளனர்.

மகாராஷ்டிர அரசு, பள்ளிகளில் ஹிந்தி 3-ம் மொழி என்ற உத்தரவை வாபஸ் பெற்ற நிலையில் மும்பையில் நடைபெற்று வரும் வெற்றி பேரணியில் தாக்கரே சகோதரர்கள் இருவரும் கலந்துகொண்டுள்ளனர்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள இந்த நிகழ்வில் பேசிய ராஜ் தாக்கரே,

"பால் தாக்கரே செய்ய முடியாததை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் செய்துள்ளார். எங்கள் இருவரையும் மீண்டும் இணைத்துள்ளார். மகாராஷ்டிரத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். எங்களது வலுவான இணைப்பினால் பாஜக அரசு ஹிந்தி திணிப்பை வாபஸ் பெற்றுள்ளது.

ஹிந்தி வெறும் 200 ஆண்டு கால வரலாறு கொண்ட மொழி. ஹிந்தி பேசும் மாநிலங்களைவிட ஹிந்தி பேசாத மாநிலங்கள் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன. அப்படியெனில் 3-வது மொழிக்கு என்ன தேவை இருக்கிறது? ஹிந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" என்று கூறினார்.

உத்தவ் பேசுகையில், "நாங்கள் இருவரும் இனி ஒன்றாக இருக்கவே தற்போது சேர்ந்துள்ளோம். நாங்கள் இப்போது சேர்ந்துள்ளது டிரைலர்தான், ஆரம்பம்தான்.

இந்து, இந்துஸ்தானை ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஹிந்தியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எங்களுக்கு இந்து மதத்தை நீங்கள்(பாஜக) கற்றுக்கொடுக்க வேண்டாம்" என்று பேசினார்.

Maharashtra Chief Minister brought us together, says Raj Thackeray in Raj Thackeray Uddhav Thackeray Rally, mumbai.

ஹிந்திக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த உத்தவ், ராஜ் தாக்கரே!

சம்பளத்திலும் சமத்துவம்! இந்தியா தொடர் முன்னேற்றம் - உலக வங்கி தகவல்!

வருமான சமத்துவத்தில் இந்தியா முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகக் கொண்டாடப்படும் இந்தியா, தற்போது மற்றொரு மைல்கல்லையும் எட்டியுள்ளது. வருமானத்தில் சமத்துவம்... மேலும் பார்க்க

அனைத்து பக்தர்களின் பாதுகாப்பும் எங்கள் முன்னுரிமை: துணைநிலை ஆளுநர்

ஜம்மு-காஷ்மீரில் யாத்திரைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தர்களின் பாதுகாப்பும் எங்களது முன்னுரிமை என்று மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூலை 3 தொடங்கி ஆகஸ்... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவால் அவர் ஜூன் 23ஆம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள தனியா... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற ரசாயன ஆலை வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிகாச்சி மருந்து ஆலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்ற வெடி ... மேலும் பார்க்க

’ஐ.எஸ்.ஐ.’ தரச் சான்று பெற்ற ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்?

தரம் குறைந்த ஹெல்மெட்களால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று ‘நுகர்வோர் விவகாரம் மற்றும் இந்திய தர நிர்ணய துறை’ சனிக்கிழமை(ஜூலை 5) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தலைக்கவசம் அணிந்துகொ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் உள்ள சந்தர்கோட் லங்கர் தளத்திற்கு அருகே அமர்நாத் யாத்திரைக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்த வ... மேலும் பார்க்க