செய்திகள் :

’ஐ.எஸ்.ஐ.’ தரச் சான்று பெற்ற ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்?

post image

தரம் குறைந்த ஹெல்மெட்களால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று ‘நுகர்வோர் விவகாரம் மற்றும் இந்திய தர நிர்ணய துறை’ சனிக்கிழமை(ஜூலை 5) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணிந்துகொள்வது இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தரமான தலைக்கவசங்கள் மட்டுமே விற்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசு புள்ளி விவரத்தின்படி, ஹெல்மெட் அணியாத காரணத்தால் கடந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 50,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா்.

தரம் குறைந்த ஹெல்மெட் அணிந்துகொண்டு செல்வதால் விபத்து ஏற்படும்போது தலைக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் போய் விடுகிறது. இந்த காரணத்தால், கடைகளில் விற்கப்படும் ஹெல்மெட்கள் அனைத்தும் ’பி.ஐ.எஸ்.’-இன் ’ஐ.எஸ்.ஐ.’ தரச் சான்று பெற்ற ஹெல்மெட்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக, சாலையோரமாக விற்கப்படும் பெரும்பாலான ஹெல்மெட்கள் தரம் குறைவான பொருள்களாகவே இருப்பதை அறிய முடிவதாகவும், அவற்றை இரு சக்கர வாகன ஓட்டிகள் வாங்கி அணிய வேண்டாமெனவும் கூறப்பட்டுள்ளது.

தரமான தலைக்கவசங்கள் தயாரிக்காத தயாரிப்பாளர்கள் மற்றும் அவற்றை விற்கும் விற்பனையாளர்கள் மீது மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் அவற்றில் செல்வோரின் பாதுகாப்பே முக்கியம் என்றும் ‘நுகர்வோர் விவகாரம் மற்றும் இந்திய தர நிர்ணய துறையின்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் தினசரி வேலைநேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு! தெலங்கானா அரசு உத்தரவு

தெலங்கானாவிலும் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை என்கிற முறை அமலாகிறது.தெலங்கானா அரசு சனிக்கிழமை(ஜூலை 5) பிறப்பித்துள்ள உத்தரவில் வணிக நிறுவனங்களில்(கடைகளுக்குப் பொருந்தாது) தொழிலாளர்களின் வேலை நேரம் நா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியின் ஒரு சுவரில் பெயின்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425 பேர்!

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் பெயின்ட்டுக்காக செலவிடப்பட்டதாக வெளியிடப்பட்ட கட்டண விவரங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஹ்தோல் மாவட்டம், சாகண்டி கிராமத்தில் ஓர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பயணி தவறவிட்ட ரூ.3.2 லட்சம் பணத்தை ஒப்படைத்த ரயில்வே போலீஸார் !

மகாராஷ்டிரத்தில் உள்ளூர் ரயிலில் பயணி தவறவிட்ட பையை மீட்டு அதன் உரிமையாளருக்கு திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சுக்லா (30) சர்ச்கேட் செல்... மேலும் பார்க்க

குஜராத்தில் 21 வயதுக்குள்பட்ட இளம்பெண் ஊராட்சி தலைவராக தேர்வு: விதிகளை மீறியதா தேர்தல் ஆணையம்?

குஜராத்தில் 19 வயது பெண் ஊராட்சி தலைவராக தேர்வான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் வயது உள்ளிட்ட விவரங்களை முறையாக ஆய்வு செய்யாததே முக்கிய காரணமென விமர்சனம் எழுந்துள்ளது.ஊராட்சி தலைவராக ஒருவர... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடி குண்டு வெடித்ததில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரஜோவா கிராமத்தில் வீடு ஒன்றில் நேற்றிரவு 8.30 ... மேலும் பார்க்க

சம்பளத்திலும் சமத்துவம்! இந்தியா தொடர் முன்னேற்றம் - உலக வங்கி தகவல்!

வருமான சமத்துவத்தில் இந்தியா முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகக் கொண்டாடப்படும் இந்தியா, தற்போது மற்றொரு மைல்கல்லையும் எட்டியுள்ளது. வருமானத்தில் சமத்துவம்... மேலும் பார்க்க