செய்திகள் :

அரசுப் பள்ளியின் ஒரு சுவரில் பெயின்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425 பேர்!

post image

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் பெயின்ட்டுக்காக செலவிடப்பட்டதாக வெளியிடப்பட்ட கட்டண விவரங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஹ்தோல் மாவட்டம், சாகண்டி கிராமத்தில் ஓர் அரசுப் பள்ளியின் சுவரில் வண்ணப்பூச்சுக்காக 233 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், நிபானியா என்ற மற்றொரு கிராமத்தில் அரசுப் பள்ளியில் 10 ஜன்னல்கள் மற்றும் 4 கதவுகளுக்கு வண்ணப்பூச்சு மேற்கொள்ள 425 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கட்டண விவரங்களும் சமூக ஊடகங்ளில் வெளியாகியுள்ளன.

சாகண்டி பள்ளியின் ஒரு சுவருக்காக 65 கொத்தனார்கள் உள்பட 233 தொழிலாளர்களுடன் 4 லிட்டர் பெயின்ட் செலவிடப்பட்டதாகவும், வேலைக்கான கட்டணமாக ரூ. 1.07 லட்சம் செலவு வந்ததாக கட்டண விவரம் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, நிபானியா பள்ளியில் 10 ஜன்னல்கள் மற்றும் 4 கதவுகளுக்காக 150 கொத்தனார்கள் உள்பட 425 தொழிலாளர்களுடன் 20 லிட்டர் பெயின்ட் செலவிடப்பட்டு, அதன் கட்டணமாக ரூ. 2.3 லட்சமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இவையனைத்தும் அம்மாநில சட்டப்பேரவையின் மசோதாவில் அளிக்கப்பட்ட கட்டண விவரங்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த 2 பள்ளிகளின் கட்டணச் சீட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்.

Madhya Pradesh School's Math Miracle

கைப்பேசி தொலைந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம்: நண்பரை 5-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த நபர் கைது

கைப்பேசி காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பரை கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த நபரைக் போலீஸார் கைது செய்தனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் ஏழைகள் அதிகரிப்பு! உலக வங்கிக்கு எதிராக மத்திய அமைச்சர் பேச்சு!

இந்தியாவில் வருமான சமத்துவம் முன்னேறி வருவதாக உலக வங்கி அறிக்கைக்கு எதிர்மாறாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார்.நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் ... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பேரன்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் மறைந்தவருமான கிருஷண்காந்தின் பேரன் விராட் காந்த் பாஜகவில் இணைந்தார்.தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலர் தருண் சுக், பஞ்சாப் பாஜக தலைவர் சுன... மேலும் பார்க்க

தொழிலாளர்களின் தினசரி வேலைநேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு! தெலங்கானா அரசு உத்தரவு

தெலங்கானாவிலும் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை என்கிற முறை அமலாகிறது.தெலங்கானா அரசு சனிக்கிழமை(ஜூலை 5) பிறப்பித்துள்ள உத்தரவில் வணிக நிறுவனங்களில்(கடைகளுக்குப் பொருந்தாது) தொழிலாளர்களின் வேலை நேரம் நா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பயணி தவறவிட்ட ரூ.3.2 லட்சம் பணத்தை ஒப்படைத்த ரயில்வே போலீஸார் !

மகாராஷ்டிரத்தில் உள்ளூர் ரயிலில் பயணி தவறவிட்ட பையை மீட்டு அதன் உரிமையாளருக்கு திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சுக்லா (30) சர்ச்கேட் செல்... மேலும் பார்க்க

குஜராத்தில் 21 வயதுக்குள்பட்ட இளம்பெண் ஊராட்சி தலைவராக தேர்வு: விதிகளை மீறியதா தேர்தல் ஆணையம்?

குஜராத்தில் 19 வயது பெண் ஊராட்சி தலைவராக தேர்வான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் வயது உள்ளிட்ட விவரங்களை முறையாக ஆய்வு செய்யாததே முக்கிய காரணமென விமர்சனம் எழுந்துள்ளது.ஊராட்சி தலைவராக ஒருவர... மேலும் பார்க்க