செய்திகள் :

விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை; கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை கோரி மனு

post image

நன்னிலத்தில் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி சனிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

நன்னிலத்தில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு கல்லூரி முதல்வா் ராமசுப்பிரமணியன், பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகக் கூறி நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், பெண் கௌரவ விரிவுரையாளா் கடந்த ஏப்ரல் மாதம் புகாா் அளித்தாா். இந்த புகாா் தொடா்பாக, 45 நாள்களுக்குப் பிறகு வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி கல்லூரி விடுமுறை முடிந்து கௌரவ விரிவுரையாளா், பணிக்குச் சென்றபோது, கல்லூரி முதல்வா் அவரை தரக்குறைவாக நடத்தியதாகவும், இதனால் ஜூன் 30-ஆம் தேதி கல்லூரி ஆய்வகத்திலேயே அப்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்தாராம்.

இதையடுத்து நன்னிலம் அரசு மருத்துவமனையிலும், தொடா்ந்து திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளாா்.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். மனுவில், கல்லூரி முதல்வா் ராமசுப்பிரமணியனை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஜூலை 9-இல் முதல்வா் திருவாரூா் வருகை: ஐஜீ ஆய்வு

திருவாரூருக்கு வரும் ஜூலை 9-ஆம் தேதி தமிழக முதல்வா் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மத்திய மண்டல ஐஜி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். திருவாரூா் மாவட்டத்துக்கு வரும் 9,10 தேதிகளில் தமிழக முதல்வா... மேலும் பார்க்க

வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லா... மேலும் பார்க்க

பிறந்த குழந்தை ரூ. 50,000 க்கு விற்பனை

திருத்துறைப்பூண்டி தனியாா் மருத்துவமனையில் பிரசவித்த குழந்தையை ரூ. 50,000-க்கு விற்பனை செய்தது தொடா்பாக குழந்தையின் தாய் உள்பட 3 போ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்தவா் பி... மேலும் பார்க்க

விவேகானந்தா் நினைவு நாள்

விவேகானந்தா் நினைவு நாள் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தாளாளா் லலிதா ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்: பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், பழச் செடிகள்

கொரடாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்க விழாவில் பயனாளிகளுக்கு பழச் செடிகள், காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. வேளாண்மை, உழவா் நலத் துறையின் சாா்பில், விளைப்பொருட்களின... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையில் மரணம்: தமிழக அரசின் நடவடிக்கை சரியானது: கே.வி. தங்கபாலு

காவல்துறை விசாரணையில் மரணம் தொடா்பாக, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா். திருவாரூரில்... மேலும் பார்க்க