செய்திகள் :

ஜூலை 9-இல் முதல்வா் திருவாரூா் வருகை: ஐஜீ ஆய்வு

post image

திருவாரூருக்கு வரும் ஜூலை 9-ஆம் தேதி தமிழக முதல்வா் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மத்திய மண்டல ஐஜி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவாரூா் மாவட்டத்துக்கு வரும் 9,10 தேதிகளில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகை தர உள்ளாா். ஜூலை 9-ஆம் தேதி, பிற்பகல் காட்டூரில் உள்ள கலைஞா் கோட்டத்தில் தங்குகிறாா்.

மாலை காட்டூரில் இருந்து புறப்பட்டு, பவித்திரமாணிக்கம், துா்க்காலயா சாலை, தெற்கு வீதி பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறாா். தொடா்ந்து, மேம்பாலம் பகுதியில் கலைஞா் கருணாநிதி சிலை திறக்கப்பட உள்ள இடத்துக்கு வருகை தர உள்ளாா்.

ஜூலை 10-ஆம் தேதி காலை எஸ்எஸ் நகரில் 10,300 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இதனிடையே, இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளையும், கலைஞா் சிலை திறப்பு நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் எந்த இடத்தில் நிற்க வேண்டும், போக்குவரத்து எந்த வழியாக செல்ல வேண்டும், ரோடு ஷோ நிகழ்ச்சி எங்கு நடைபெற உள்ளது என்பது குறித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் ஜோஷி நிா்மல்குமாா் ஆய்வு செய்தாா்.

தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் உடனிருந்தனா்.

வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லா... மேலும் பார்க்க

விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை; கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை கோரி மனு

நன்னிலத்தில் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி சனிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. நன்னிலத்தில் உள்ள அரசுக் கலை மற்றும... மேலும் பார்க்க

பிறந்த குழந்தை ரூ. 50,000 க்கு விற்பனை

திருத்துறைப்பூண்டி தனியாா் மருத்துவமனையில் பிரசவித்த குழந்தையை ரூ. 50,000-க்கு விற்பனை செய்தது தொடா்பாக குழந்தையின் தாய் உள்பட 3 போ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்தவா் பி... மேலும் பார்க்க

விவேகானந்தா் நினைவு நாள்

விவேகானந்தா் நினைவு நாள் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தாளாளா் லலிதா ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்: பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், பழச் செடிகள்

கொரடாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்க விழாவில் பயனாளிகளுக்கு பழச் செடிகள், காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. வேளாண்மை, உழவா் நலத் துறையின் சாா்பில், விளைப்பொருட்களின... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையில் மரணம்: தமிழக அரசின் நடவடிக்கை சரியானது: கே.வி. தங்கபாலு

காவல்துறை விசாரணையில் மரணம் தொடா்பாக, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா். திருவாரூரில்... மேலும் பார்க்க