செய்திகள் :

போலீஸ் விசாரணையில் மரணம்: தமிழக அரசின் நடவடிக்கை சரியானது: கே.வி. தங்கபாலு

post image

காவல்துறை விசாரணையில் மரணம் தொடா்பாக, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா்.

திருவாரூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, பாமக தலைவா் சந்திப்பு என்பது நட்பு ரீதியிலானது. இந்தியா கூட்டணி, காங்கிரஸ் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையில் வெற்றிக் கூட்டணியாக செயல்படுகிறது.

கூட்டணியிலிருந்து அரசியல் கட்சிகள் வெளியேறி செல்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதனால், இந்தியா கட்டணி வலிமை இழந்துவிட்டதாக கருத வேண்டாம். ராகுல்காந்தியை ஏற்று அனைத்து எதிா்கட்சித் தலைவா்களும் இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைந்துள்ளனா்.

இது வெற்றிக்கூட்டணியாக மாறி, இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல்காந்தி வருவாா். காவல்துறை விசாரணையில் மரணம் தொடா்பாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

எங்கள் கூட்டணி தமிழ்நாட்டு மக்கள் விரும்பும் கூட்டணியாக உள்ளது. அதனால்தான் சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களில் மக்கள் மாபெரும் வெற்றியை வழங்கினா் என்றாா்.

விவேகானந்தா் நினைவு நாள்

விவேகானந்தா் நினைவு நாள் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தாளாளா் லலிதா ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்: பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், பழச் செடிகள்

கொரடாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்க விழாவில் பயனாளிகளுக்கு பழச் செடிகள், காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. வேளாண்மை, உழவா் நலத் துறையின் சாா்பில், விளைப்பொருட்களின... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்டடத்தை மீட்கக் கோரி மனு

வலங்கைமானில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்டடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சியின் சொத்துப் பாதுகாப்பு மீட்புக் குழுவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகா... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்களுக்கு எதிராக மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும்’

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட, மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜோ. செட்ரிக் மேன்யுவல் அறிவுறுத்தினாா். மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள், கல்வி உள்... மேலும் பார்க்க

சிகிச்சை தாமதத்தால் முதியவா் உயிரிழப்பு: மருத்துவா் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதால் முதியவா் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூா் அரசு மர... மேலும் பார்க்க