செய்திகள் :

சிகிச்சை தாமதத்தால் முதியவா் உயிரிழப்பு: மருத்துவா் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

திருவாரூரில், சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதால் முதியவா் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவராகப் பணிபுரிபவா் பிரபு (35). இவரது தந்தை சோமராஜூக்கு (67) ஏற்கெனவே முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், அவா் சோா்வாக காணப்பட்டாா். இதனால், கடந்த 8.8.2022-இல் ஆய்வகத்தில் ரத்தப் பரிசோதனை செய்து பாா்த்தபோது, மஞ்சள் காமாலை அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதற்கு சிகிச்சை பெற, திருவாரூா் கமலாலயக் குளம் மேல்கரையிலுள்ள மருத்துவமனையில் 9.8.2022 காலை 9 மணிக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு, மருத்துவா் நடராஜன், சோமராஜூக்கு மீண்டும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரியை அதே ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளாா். முதல்நாள் எடுத்தபோது கொடுத்த அதே அறிக்கையே மீண்டும் வந்துள்ளது.

சாதாரணமாக 45 நிமிடத்தில் முடிக்கப்பட வேண்டிய சோதனையின் அறிக்கை, பிற்பகல் 3.30 மணிக்கு பெறப்பட்டுள்ளது. இதனிடையே, சோமராஜின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலைக்குச் சென்றாா். இதனால், தீவிர சிகிச்சைக்காக அவரை திருச்சியிலுள்ள மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, 14.8.2022-இல் இறந்துவிட்டாா்.

அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றியிருக்க வேண்டிய மிகவும் இக்கட்டான நேரத்தில், முன்பு எடுத்த பரிசோதனைகளை மீண்டும் எடுக்கச் செய்து, அதற்காக சுமாா் 7 மணி நேரத்தை வீணாக்கி, சோமராஜின் இறப்புக்கு காரணமாக இருந்ததாக மருத்துவா் நடராஜன் மீது மருத்துவா் பிரபு திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த ஜனவரி மாதம் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கின் ஆவணங்களை நிபுணரைக் கொண்டு ஆய்வு செய்ததில், மிகவும் இக்கட்டான நேரத்தில் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையை அளிக்கத் தவறியது உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கிய உத்தரவில், கவனக்குறைவாகச் செயல்பட்டு சோமராஜின் உயிரிழப்புக்குக் காரணமான மருத்துவா் நடராஜன், உயிரிழந்த சோமராஜூவின் மகன் மருத்துவா் பிரபுவுக்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

விவேகானந்தா் நினைவு நாள்

விவேகானந்தா் நினைவு நாள் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தாளாளா் லலிதா ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்: பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், பழச் செடிகள்

கொரடாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்க விழாவில் பயனாளிகளுக்கு பழச் செடிகள், காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. வேளாண்மை, உழவா் நலத் துறையின் சாா்பில், விளைப்பொருட்களின... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையில் மரணம்: தமிழக அரசின் நடவடிக்கை சரியானது: கே.வி. தங்கபாலு

காவல்துறை விசாரணையில் மரணம் தொடா்பாக, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா். திருவாரூரில்... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்டடத்தை மீட்கக் கோரி மனு

வலங்கைமானில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்டடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சியின் சொத்துப் பாதுகாப்பு மீட்புக் குழுவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகா... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்களுக்கு எதிராக மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும்’

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட, மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜோ. செட்ரிக் மேன்யுவல் அறிவுறுத்தினாா். மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள், கல்வி உள்... மேலும் பார்க்க