செய்திகள் :

பைக்கில் வந்த இளைஞர் வழிமறித்து கொலை: காரில் தப்பிய 5 போ் கும்பல்

post image

சிவகங்கை: சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பைக்கில் சென்ற இளைஞரை வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பிச்சென்ற சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையை அருகே தமராக்கி கிராமத்தை சேர்ந்த செல்லச்சாமி மகன் மனோஜ் பிரபு(29). இவரது குடும்பம் தற்போது சிவகங்கை காமராஜர் காலனியில் வசித்து வருகிறது. வெளிநாட்டில் பணிபுரிந்த மனோஜ்பிரபு விடுமுறையில் அண்மையில் சொந்த ஊர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் தனது நண்பர்கள் ஹரிகரன், அஜித்குமார் ஆகியோருடன் அருகில் உள்ள இடையமேலூர் கிராமத்தில் திருவிழாவௌயொட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கலைநிகழ்ச்சியை பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் 3 பேரும் சக்கந்திக்கு திரும்பினர். புதுப்பட்டி அருகே வரும்போது காரில் வந்த மர்ம கும்பல் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அனைவரும் காயமடைந்தனர். இதில், தப்பியோட முயன்ற மனோஜ் பிரபுவை மட்டும் காரில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கிய மர்ம கும்பல் விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பிச் சென்றது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இருவர் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த சிவகங்கை நகர் போலீஸார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்து கிடந்த மனோஜ் பிரபுவின் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மனோஜ்பிரவின் தங்கை புவனேஸ்வரியை தமராக்கியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் அபிமன்யூ கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்தனராம். இதனிடையே புவனேஸ்வரியின் தந்தை செல்லச்சாமி தனது சொந்தத்தில் வேறு ஒரு பையனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அபிமன்யூ தான் காதலித்தபோது புவனேஸ்வரியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், விடியோக்களை வெளியிட்டார். இதன் காரணமாக புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து புவனேஸ்வரியின் தந்தை செல்லச்சாமி அபிமன்யூவின் தந்தை பாண்டியை தாக்கியது தொடர்பாக சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2022 இல் இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து செல்லச்சாமி தனது ஊரைக்காலி செய்துவிட்டு சிவகங்கை அருகே காமராஜர் காலனி மலர் நகருக்கு குடி பெயர்ந்தார். தொடர்பாக இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இதனிடையே, வெளிநாட்டில் இருந்து வந்த மனோஜ்பிரபு ஏற்கெனவே நடைபெற்றுவந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகததால் அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பிணையில் இருந்து வந்தார்,

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் நண்பர்களுடன் வந்த மனோஜ்பிரபு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலையில் ஈடுபட்ட அபிமன்யூ, பின்னணியில் இருந்ததாக தமராக்கியைச் சேர்ந்த பாண்டி மனைவி பூச்சிப்பிள்ளை, முருகன், மணி, முனீஸ்வரன் உள்பட 5 பேரை சிவகங்கை நகர் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அபிமன்யூ உடன் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

பல்கலை. துணைவேந்தா்கள் நியமன சட்ட தடைக்கு எதிராக தமிழக அரசு மனு: மத்திய அரசு, ஆளுநா் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

The incident of a young man riding a bike being hacked to death near Sivaganga on Friday midnight and then fleeing in a car has shocked the general public.

ஜூலை 7 இல் சோளிங்கர் வட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை

சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கையொட்டி ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருள்... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடிவிபத்து... தொடரும் உயிரிழப்பு!

சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் , காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி அழகு ராஜா சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் ... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,480-க்கு விற்பனையாகிறது.ஆண்டு தொடக்கம் ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 43,000 கன அடியில் இருந்து 50,000 அடியாக அதிகரித்துள்ளது.காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் நீர் திறப்பு 40,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 30,000 கனஅடியில் 40,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.காவிரியின் நீா் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கா்... மேலும் பார்க்க