செய்திகள் :

பாகிஸ்தான் - அஜர்பைஜான் இடையில் ரூ.17,000 கோடி முதலீடு ஒப்பந்தம்!

post image

பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இடையில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.17 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தில் அந்நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அஜர்பைஜான் தலைமையில் நேற்று (ஜூலை 4) நடைபெற்ற பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில், அந்நாட்டு அதிபர் இல்ஹெம் அலியேவ் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கான்கெண்டி நகரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இருநாடுகளின் தலைவர்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், பாகிஸ்தானின் துணைப் பிரதமரும், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தார் மற்றும் அஜர்பைஜானின் பொருளாதாரத் துறை அமைச்சர் மிகாயில் ஜப்பாரோவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில், இந்த முதலீடு குறித்த விரிவான ஒப்பந்தம் அஜர்பைஜான் அதிபர் பாகிஸ்தான் வரும்போது கையெழுத்தாகும் என உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், அவரது பாகிஸ்தான் பயணம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை.

முன்னதாக, கடந்த சில காலமாக பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இடையிலான உறவுகள் மேம்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் அஜர்பைஜான் பாகிஸ்தானுக்கு தனது ஆதரவுகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

An investment agreement worth 2 billion US dollars has been signed between Pakistan and Azerbaijan.

இதையும் படிக்க:காஸா போா் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிர ஆலோசனை

பாகிஸ்தானில் 3 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில், 3 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின், லக்கி மர்வாத் மாவட்டத்தில... மேலும் பார்க்க

ரஷியா தோற்றால், அடுத்தது நாம்தான்! அமெரிக்காவால் சீனா அச்சம்?

ரஷியா - உக்ரைன் போர் முடிவடைந்தால், அமெரிக்காவின் கவனம் சீனாவின் பக்கம் திரும்பி விடும் என்று சீன அமைச்சர் கூறியுள்ளார்.ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள... மேலும் பார்க்க

காஸா போர் நிறுத்தம்: மத்தியஸ்தர்களுக்கு ஹமாஸ் படையின் பதில்!

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் வரைவு திட்டத்துக்கு, மத்தியஸ்தர்களுக்கு நேர்மறையான பதிலை (பாசிடிவ் ரெஸ்பான்ஸ்) வழங்கியுள்ளதாக ஹமாஸ் கிளர்ச்சிப்படையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.இஸ்ரேல... மேலும் பார்க்க

காஸா போா் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிர ஆலோசனை

இஸ்ரேலுடனான காஸா போா் நிறுத்தம் தொடா்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து பிற பாலஸ்தீன அமைப்புகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. காஸாவில் போா் நிறுத்தம் ஏற்படுவத... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை கூறியது. எல்லை மாகாணமான கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தி... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷிய ட்ரோன் தாக்குதல் புதிய உச்சம்

உக்ரைனின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒருவா் உயிரிழந்ததுடன், 26 போ் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். இத... மேலும் பார்க்க