செய்திகள் :

பாகிஸ்தானில் 3 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

post image

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில், 3 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின், லக்கி மர்வாத் மாவட்டத்திலுள்ள ஹுராமா கிராமத்தில், இன்று (ஜூலை 4) பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அந்நாட்டின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில், தலிபான் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கொல்லப்பட்ட மூவரும், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த வசீமுல்லா (எ) உமர் கத்தாப், குத்ரத்துல்லா (அ) அபுபக்கர் மற்றும் ஹிஜ்ரத்துல்லா என்பது தெரியவந்துள்ளது.

இத்துடன், அந்த 3 பயங்கரவாதிகளும் வெடிகுண்டு தாக்குதலில் 3 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களது கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Three Taliban militants were killed in a military operation carried out by the Counter Terrorism Department in Pakistan's northwestern province.

இதையும் படிக்க: ரஷியா தோற்றால், அடுத்தது நாம்தான்! அமெரிக்காவால் சீனா அச்சம்?

துருக்கி, சிரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்..போராடும் தீயணைப்பு வீரர்கள்!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் காட்டுத் தீ பரவி வருவதால், இருநாட்டு தீயணைப்புப் படையினரும் தங்களது எல்லைகளில் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். துருக்கி நாட்டில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் பல்வேற... மேலும் பார்க்க

இஸ்ரேல் - காஸா போர்நிறுத்தம்? ஹமாஸின் அறிவிப்பால் மத்தியஸ்தர்கள் மகிழ்ச்சி!

காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான முன்மொழிவுக்கு சாதகமான பதிலை அளித்திருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. முன்மொழிவில் ச... மேலும் பார்க்க

ரஷியா தோற்றால், அடுத்தது நாம்தான்! அமெரிக்காவால் சீனா அச்சம்?

ரஷியா - உக்ரைன் போர் முடிவடைந்தால், அமெரிக்காவின் கவனம் சீனாவின் பக்கம் திரும்பி விடும் என்று சீன அமைச்சர் கூறியுள்ளார்.ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள... மேலும் பார்க்க

காஸா போர் நிறுத்தம்: மத்தியஸ்தர்களுக்கு ஹமாஸ் படையின் பதில்!

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் வரைவு திட்டத்துக்கு, மத்தியஸ்தர்களுக்கு நேர்மறையான பதிலை (பாசிடிவ் ரெஸ்பான்ஸ்) வழங்கியுள்ளதாக ஹமாஸ் கிளர்ச்சிப்படையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.இஸ்ரேல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - அஜர்பைஜான் இடையில் ரூ.17,000 கோடி முதலீடு ஒப்பந்தம்!

பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இடையில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு துறைகளில் முதலீடு ச... மேலும் பார்க்க

காஸா போா் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிர ஆலோசனை

இஸ்ரேலுடனான காஸா போா் நிறுத்தம் தொடா்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து பிற பாலஸ்தீன அமைப்புகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. காஸாவில் போா் நிறுத்தம் ஏற்படுவத... மேலும் பார்க்க