செய்திகள் :

Armstrong: “ஆம்ஸ்ட்ராங் சிந்திய ரத்தம் ஒருபோதும் அழிந்து ஒழியாது” - ஜான் பாண்டியன்

post image

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்றது.

ஆம்ஸ்ட்ராங்கின் இந்த முதலாமாண்டு நினைவு நாளில் அவரின் மனைவி பொற்கொடி, `தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கலந்துகொண்டிருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங் குறித்து பேசிய அவர், “எனக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் 40 ஆண்டுகால உறவு இருக்கிறது. என்னுடைய குழந்தைகளை ஆம்ஸ்ட்ராங் கடைக்கு தூக்கிச் செல்வார். அப்பேற்பட்ட உறவுதான் எங்களுடையது. சமுதாய மக்களுக்காக உழைக்கும் செல்வந்தனை இறப்பு நிகழ்ச்சியில் பார்க்கும்போது நாங்கள் வருத்தப்படுகிறோம்.

அவருடைய உடலில் வெட்டப்பட்ட காயங்கள் எல்லாம் ரத்தமாக சிதறினாலும் கூட  நம்மை திரட்டி... நான் சாகவில்லை. இன்னும் உங்களில் ஒருவனாக இருக்கிறேன் என்பதைத்தான் மனதிலே நினைக்கத் தோன்றுகிறது. என்னுடைய கணவன் பணியை நானும் மேற்கொள்வேன் என்று பொற்கொடி களமிறங்கி இருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங்

அது சாதாரண விஷயம் அல்ல. தாழ்த்தப்பட்ட மக்களை எப்படியாவது வளர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம். ஆம்ஸ்ட்ராங் சிந்திய ரத்தம் ஒருபோதும் அழிந்து ஒழியாது. ஆம்ஸ்ட்ராங் விட்ட பணியைப் பொற்கொடித் தொடரட்டும்” என்று பேசியிருக்கிறார்.     

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

IT Wing நிர்வாகிகளுக்கு அரசுப் பணி வழங்குகிறதா DMK ? | ADMK TVK SEEMAN NTK| Imperfect Show 5.7.2025

* சுற்றுப்பயணத்துக்கான Logo-வை வெளியிட்ட எடப்பாடி! * எடப்பாடிக்கு இன்றுமுதல் Z+ பாதுகாப்பு? * அதிமுக உட்கட்சி விசாரணை - உயர்நீதிமன்றத்தில் பதில் சொன்ன தேர்தல் ஆணையம்? * அரசுப் பணிகளில் திமுக ஐடி விங் ... மேலும் பார்க்க

`மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருகிறது..!' - முதல்வர் ஸ்டாலின்

மராத்திய மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய மூன்றாவது மொழிப்பாடமாக அறிவித்து உத்தரவிட்டது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு. இதற்கு ம... மேலும் பார்க்க

Armstrong: "அண்ணனுக்கு இந்த அசம்பாவிதம் நடந்திருக்கக் கூடாது"- நினைவேந்தல் கூட்டத்தில் பா.ரஞ்சித்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் இ... மேலும் பார்க்க

'அதிமுக-வை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா விஜய்?' - சந்தேக தொனியில் திருமா!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அஜித் குமாரின் காவல் மரணம், விஜய்யின் அரசியல் என பலவற்றைப் பற்றியும் திருமா பேசி... மேலும் பார்க்க

Armstrong: 'மக்கள் மனதில் அன்பையும் அறிவையும் விதைத்தது நம்ம ஆம்ஸ்ட்ராங்'- நயினார் நாகேந்திரன்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங்இதில்... மேலும் பார்க்க