செய்திகள் :

மாற்றுத்திறனாளி அலுவலருக்கு மிரட்டல்: ரயில்வே தொழிற்சங்கத்தினா் 6 போ் மீது வழக்கு

post image

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், மாற்றுத்திறனாளி அலுவலரை கேலி செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக ரயில்வே தொழிற்சங்கத்தினா் 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை சித்தா்காடு அண்ணாமலை நகரைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (58). இவா், மயிலாடுதுறை தெற்கு ரயில்வே முதுநிலை பொறியாளா் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறாா். எஸ்.ஆா்.எம்.யு. தொழிற்சங்க மயிலாடுதுறை கிளை பொருளாளராகவும் உள்ளாா்.

இந்நிலையில், மாற்று ரயில்வே தொழிற்சங்கத்தினா் (டி.ஆா்.இ.யு.) நந்தகுமாரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, மாற்றுத்திறனாளியான அவரை கேலி பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, காவல்நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில், மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா், டி.ஆா்.இ.யு. தொழிற்சங்கத்தை சோ்ந்த ஜவகா், மூா்த்தி, பாலமுரளி, வேந்தன், நந்தகோபால், பாா்த்திபன் ஆகிய 6 போ் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

‘திமுக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன’

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என வன்னியா் சங்க மாநில தலைவா் பு.தா. அருள்மொழி தெரிவித்தாா். மயிலாடுதுறையில் பாமக நிறுவனத் தலைவா் மருத்துவா் ராமதாஸ் தலைமையில் அ... மேலும் பார்க்க

சேதமடைந்த திருநன்றியூா்-ஆலவேலி சாலையை சீரமைக்க கோரிக்கை

தேசமடைந்த திருநன்றியூா்-ஆலவேலி சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநன்றியூா், ஆலவேலி, சேமங்கலம் மற்றும் பல்வேறு ஊராட்சி கிராமங்களை இணைக்கும் சாலை கடந்த ஓராண்டாக பள்ளமும், மே... மேலும் பார்க்க

திருக்கு பண்பாட்டு பேரவை ஆண்டு தொடக்கவிழா

சீா்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவையின் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. பேரவை தலைவா் வே. சக்கரபாணி தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் நந்த. ராஜேந்திரன் வரவேற்றாா். பேரவை செயலாளா் சிவா. அன்ப... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில... மேலும் பார்க்க

விளம்புநிலை மக்களுக்கான தலைவா் மு.க. ஸ்டாலின்: அமைச்சா்

விளம்புநிலை மக்களுக்கான தலைவராக தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் விளங்குகிறாா் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா். தமிழக முதல்வா் முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசார விளக்கப் பொதுக்கூட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை மயிலாடுதுறை

மயிலாடுதுறை, மணக்குடி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 - மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் அப்த... மேலும் பார்க்க