செய்திகள் :

Doctor Vikatan: மருந்துகள் எடுக்கும்போது சிறுநீரின் நிறம் மாறுவது ஏன்?

post image

Doctor Vikatan: ஏதேனும் உடல்நலக் கோளாறுகளுக்காக மருந்து, மாத்திரைகள் எடுக்கும்போது சிறுநீரின் நிறம் மாறுவது ஏன்? இது சாதாரணமானதுதானா அல்லது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி.

குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

பொதுவாகவே நம் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில்தான் இருக்க வேண்டும். இதை straw-colour அல்லது pale yellow colour என குறிப்பிடுவதுண்டு. சில மருந்துகளை எடுக்கும்போது அவற்றில் உள்ள கலரிங் ஏஜென்ட்டுகள், நிறமிகளின் காரணமாக, சிறுநீரின் நிறம் மாறலாம்.

சில வகை மருந்துகளை எடுக்கும்போது சிலருக்கு அடர் மஞ்சள் நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ, பிங்க் நிறத்திலோ கூட சிறுநீர் வெளியேறலாம். மருந்துகளின் தன்மையைப் பொறுத்து ஆரஞ்சு அல்லது வயலட்  நிறத்தில்கூட சிறுநீர் வெளியேறுவதைப் பார்க்கலாம். மருந்துகள் எடுக்கும்போது  அவற்றிலுள்ள நிறமிகளும் பிற சேர்க்கைகளும் நம் கல்லீரலில் நடக்கும் ரசாயன மாற்றத்தில் உருமாறி, ரத்தத்தில் கலந்து சிறுநீர் வழியே வெளியேறும். இப்படி சிறுநீர் நிறம் மாறி வெளியேறுவதால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மருந்துகள் எடுக்கும்போது மட்டும் சிறுநீரின் நிறம் மாறி வெளியேறுகிறதா அல்லது சாதாரணமாகவே அப்படித்தான் வெளியேறுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

ஒருவேளை சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுகிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி ரத்தம் கலந்து வெளியேறினால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மருந்துகளை நிறுத்தியதும் சிறுநீர் வழக்கமான நிறத்துக்கு மாறிவிடும் என்பதால் இந்த நிறமாற்றம் தற்காலிகமானதுதான். அது குறித்துக் கவலை கொள்ள வேண்டாம். ஆனால், மருந்துகளை நிறுத்திய பிறகும் அதே நிறம் தொடர்ந்தால் மட்டும் மருத்துவ ஆலோசனை பெறலாம்.

மருந்துகள் எடுக்கும்போது அவற்றிலுள்ள நிறமிகளும் பிற சேர்க்கைகளும் நம் கல்லீரலில் நடக்கும் ரசாயன மாற்றத்தில் உருமாறி, ரத்தத்தில் கலந்து சிறுநீர் வழியே வெளியேறும்.

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, எந்த மருந்துகளும் எடுக்காமலேயே சிறுநீர் சிவப்பு, ஆரஞ்சு, கோலா நிறம், கறுப்பு நிறத்தில் எல்லாம் வெளியேறினால், அதை அலட்சியப்படுத்த வேண்டாம்.  மருத்துவரை அணுகி, சிறுநீர்ப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு பிறகு அது என்ன பிரச்னை, என்ன சிகிச்சை தேவை என்பது குறித்து முடிவு செய்யலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் அறிமுகம் செய்யும் ‘CanWin’ ஆதரவுக் குழு | ஸ்டோரீஸ் ஃப்ரம் தி ஸ்டேஜ்

புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர் வாழ்பவர்களுக்கான தேசிய மாத நிகழ்வை முன்னிட்டு, ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACCs) ‘CanWin’ என்ற புற்றுநோய் ஆதரவு குழு தொடங்கப்படுவதை இன்... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா?

Doctor Vikatan: நான் ஐடி வேலையில் இருக்கிறேன். எனக்கு கடந்த சில மாதங்களாக சரியான தூக்கம் இல்லை. மக்னீசியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நன்றாகத் தூக்கம் வரும் என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா.... ய... மேலும் பார்க்க

மனிதனைக் கடித்து இறந்த பாம்பு; வேப்பங்குச்சியால் பல் துலக்கியதுதான் காரணமா? - நிபுணர்கள் சொல்வதென்ன?

பாம்பு கடித்து மனிதர்கள் இறந்த செய்தியை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சில தினங்களாக மனிதனைக் கடித்தப் பாம்பு இறந்த செய்தி ஒன்று வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பாம்புக்கடிசச்சின் நாக்பூரேமத்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: BP மாத்திரைகள்; ஒருமுறை எடுக்க ஆரம்பித்தால் ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமா?

Doctor Vikatan: ஒருமுறை ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கினால், வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா... என் ரத்த அழுத்தம் குறைந்தாலும் மாத்திரைகள்அவசியமா அல்லது கட்டுக்குள் வந்தவுடன... மேலும் பார்க்க

Doctor Vikatan: கருஞ்சீரகம் மரணத்தை தவிர எல்லா நோய்களுக்கும் மருந்தாகுமா?

Doctor Vikatan: கருஞ்சீரகம் என்பது மரணத்தைத் தவிர எல்லா நோய்களையும் தீர்க்கும் மூலிகை என்றும், அதை எல்லோரும் தினமும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் நிறைய செய்திகள், வீடியோக்கள் பார்க்கிறோம். உண்மையிலேயே க... மேலும் பார்க்க