336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
2-வது டெஸ்ட்: உணவு இடைவேளையின்போது தென்னாப்பிரிக்கா 113 ரன்கள் குவிப்பு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 6) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
உணவு இடைவேளையின்போது, தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டோனி டி ஸார்ஸி 10 ரன்களிலும், லெஸிகோ 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின் ஜோடி சேர்ந்த கேப்டன் வியான் முல்டர் மற்றும் டேவிட் பெடிங்ஹம் சிறப்பாக விளையாடி வருகின்றனர். கேப்டன் வியான் முல்டர் 68 பந்துகளில் 60 ரன்களுடனும் (8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), டேவிட் பெடிங்ஹம் 34 பந்துகளில் 40 ரன்களுடனும் (5 பவுண்டரிகள்) களத்தில் உள்ளனர்.
ஜிம்பாப்வே தரப்பில் தனாகா சிவங்கா மற்றும் வெலிங்டன் மசகட்ஸா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
South Africa scored 113 runs for the loss of 2 wickets in the first innings of the second Test match against Zimbabwe.
இதையும் படிக்க: பர்மிங்ஹாமில் மழை..! இந்தியா - இங்கிலாந்து போட்டி நடைபெறுமா?