செய்திகள் :

பாளையங்கோட்டை: மேம்பாலம் பஸ் நிறுத்தங்களில் இருக்கை வசதிகள் இல்லை – பொதுமக்கள் கோரிக்கை!

post image

திருநெல்வேலி: நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே அமைந்துள்ள செல்லப்பாண்டி மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தங்கள், பயணிகளுக்குத் தேவையான இருக்கை வசதிகள் இல்லாமல் உள்ளன. இதனால் தினசரி பயணிக்கும் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் நெல்லை புதிய பஸ்நிலையம், நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. அம்பை, சுரண்டை, கடையம், செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம் மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் பஸ்கள் இங்கு நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன.

இந்த இடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பயணிகள் பேருந்துகளில் பயணிப்பது வழக்கமாகவே காணப்படுகிறது. இதற்காக பஸ் நிறுத்தம் நான்கு பிரிவுகளில் கட்டமைக்கப்பட்டுள்ளன:

1. முதலாம் நடைமேடை – நெல்லை புதிய பஸ்நிலையம் நோக்கி செல்லும் பஸ்களுக்கு

2. இரண்டாம் நடைமேடை – பாளையங்கோட்டை பஸ்நிலையம் நோக்கி செல்லும் பஸ்களுக்கு

3. மூன்றாம் நடைமேடை – மார்க்கெட், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கான பஸ்களுக்கு

4. நான்காவது பிரிவு – பாளையங்கோட்டையில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கி வந்து செல்லும் பஸ்களுக்கு. இதற்காக இரண்டு நடைமேடைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நடைமேடைகளில், குறிப்பாக பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிக்குச் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் இருக்கைகள் இல்லாததால், பயணிகள் தரையில் அமர்ந்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் நீண்ட நேரம் நின்று பஸ்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. இது முதியவர்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், இப்பகுதியில் சாலை அமைப்புப் பணிகள் மற்றும் கட்டுமான வேலைகள் நடைபெறுவதால் தூசி மற்றும் புழுதி அதிக அளவில் பறக்கின்றன. இது பயணிகளின் உடல்நலத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.

இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், “இங்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் பஸ்களில் பயணம் செய்கிறார்கள். ஆனால் இருக்கை வசதிகள் இல்லாததால் தரையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது உடல் நலத்தையும் பாதிக்கிறது. நகராட்சி மற்றும் போக்குவரத்து துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, இருக்கைகள் ஏற்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

காவல்துறை தாக்குதலில் பலியான அஜித்குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி; என்ன நடந்தது?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: ரயில் பெட்டிகளில் தங்கும் அறை வசதி... புது அனுபவத்தை அறிமுகப்படுத்தும் ரயில்வே துறை!

புதிய பாம்பன் பாலம்புனித தலமாக விளங்கும் ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவை தவிர வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா... மேலும் பார்க்க

MAHER UNIVERSITY: மெஹர் பல்கலை வேந்தர் இல்லத் திருமண விழா!

சென்னை, மீனாட்சி மற்றும் ஸ்ரீமுத்துக்குமரன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மறைந்த திரு.A.N ராதாகிருஷ்ணன் - திருமதி. கோமதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பேரனும், திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன் திரு. பிரபாகர் எ... மேலும் பார்க்க

Tantea:‌ `உடலை உரமாக்கி உழைக்கும் எங்கள் சாவுக்கு டிராக்டரை அனுப்புகிறது அரசு'- தொழிலாளர்கள் குமுறல்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இலங்கையின் மலைப்பிரதேசங்களில் தேயிலை, காஃபி பயிர்களுக்கான பெருந்தோட்டங்கள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டன. காடு, மலைகளை‌ அழித்து தோட்டங்களை உருவாக்க தமிழ்நாட்டின் ... மேலும் பார்க்க

துணைவேந்தர்கள் நியமனம்: "4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" - உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.அதில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்... மேலும் பார்க்க