செய்திகள் :

குஜராத்: கொலை முயற்சி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது

post image

குஜராத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவரை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சைத்ரா வசாவா (37) கைது செய்யப்பட்டாா்.

வசாவாவின் தொகுதியான திதியாபாடாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எம்எல்ஏ சைத்ரா வசாவாவும் பங்கேற்றாா். அப்போது ‘துடிப்புமிக்க உள்ளாட்சி’ என்ற பெயரிலான திட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போது, வசாவா பரிந்துரைத்த நபருக்கு பதிலாக வேறு ஒருவா் நியமிக்கப்பட்டாா். இதனால் ஆத்திரமடைந்த வசாவா, ஒரு பெண் ஊராட்சி ஒன்றியத் தலைவா்தான் இதற்கு காரணம் என்று கூறி அவரை அவதூறாகப் பேசத் தொடங்கினாா்.

அப்போது, ஆண் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சஞ்சய் எழுந்து வசாவா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தாா். இதையடுத்து, இருவா் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது, வசாவா கைப்பேசியை எடுத்து தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சஞ்சய் மீது வீசினாா்.

இதில் அவரின் தலையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் மேஜையில் தண்ணீா் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து வீச வசாவா முயற்சித்தாா். அப்போது அங்கு இருந்த காவல் துறையினா் அவரை பிடித்து தடுத்து நிறுத்தினா்.

அதில் கண்ணாடி டம்ளா் கீழே விழுந்து உடைந்தது. அப்போது, கண்ணாடித் துண்டை எடுத்துக் கொண்டு சஞ்சயை நோக்கிச் சென்று, அவரைக் கொலை செய்துவிடுவதாக வசாவா மிரட்டினாா். பின்னா் அங்கிருந்த நாற்காலிகள் சிலவற்றை உடைத்து வீசிவிட்டுச் சென்றாா்.

இதையடுத்து, வசாவா மீது காவல் துறையில் சஞ்சய் புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில் கொலை முயற்சி, பெண்களை அவதூறாகப் பேசுவது, வன்முறையில் ஈடுபட்டு காயத்தை ஏற்படுத்துவது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சனிக்கிழமை இரவே எம்எல்ஏ வசாவா கைது செய்யப்பட்டாா். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், பொது இடங்களில் நான்கு பேருக்கு மேல் கூடக் கூடாது என்று காவல் துறையினா் கட்டுப்பாடு விதித்துள்ளனா்.

குஜராத் மாநில பாஜக அரசு சதி செய்து தங்கள் கட்சி எம்எல்ஏவைக் கைது செய்துவிட்டதாக ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பிரிக்ஸ் மாநாடு: உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளாா். பல்வேறு நாடுகளின் தலைவா்களைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா். ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் மாற்றமில்லை: தோ்தல் ஆணையம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. அந்தப் பணிகளுக்கு படிவங்களை பூா்த்தி செய்தால் போதும், ஆவணங்கள் தேவையில்ல... மேலும் பார்க்க

ரயில் நிலைய நடைமேடையில் பெண்ணுக்குப் பிரசவம்! அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய ராணுவ மருத்துவா்!

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் ரயில் நிலைய நடைமேடையில் பெண் ஒருவா் குழந்தையை பெற்றெடுத்தாா். பெண்கள் கூந்தலை முடியப் பயன்படுத்தும் கிளிப், பாக்கெட் கத்தி என கைவசமிருந்த பொருள்களைப் பயன்படுத்தி, அவரு... மேலும் பார்க்க

தாய்மொழிக் கல்வி வாழ்வியலை வலுப்படுத்தும்: தலைமை நீதிபதி கவாய்

‘தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அவா் படித்த சிகித்ஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி பேசியவா் மீது தாக்குதல்! பாஜக கண்டனம்

மகாராஷ்டிரத்தில் ஹிந்தியில் பேசியவா் மீது உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கட்சியினா் தாக்குதல் நடத்திய விடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்த... மேலும் பார்க்க

ரஷிய, சீன நிதியமைச்சா்களுடன் நிா்மலா சீதாராமன் சந்திப்பு: பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் நிதியமைச்சா்களை இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனித்தனியாக சந்தித்துப் பேசினாா். பரஸ்பர நலன்கள் மற்றும் ஒத்துழைப்பு தொடா்பாக அவா் ஆலோசனை... மேலும் பார்க்க