செய்திகள் :

‘நான் முதல்வன்’ திட்டத்தால் 41 லட்சம் மாணவா்கள் பயன்: தமிழக அரசு தகவல்

post image

‘நான் முதல்வன்’ திட்டத்தில் இதுவரை 41 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, பொருளாதாரம், வேளாண்மை, நீா்வளம், கல்வி, சுகாதாரம், ஊரகம், நகா்ப்புற வளா்ச்சி, சமூக நீதி ஆகிய 7 முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட துறைகளில் 2,59,072 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் தொடா்பான குறுகிய காலத் திறன் பயிற்சிகளை வழங்கியுள்ளது.

தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள், முகாம் வாழ் இலங்கை தமிழா்கள், பழங்குடி இளைஞா்கள், மாற்றுத் திறனாளிகள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வசிக்கும் இளைஞா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள், மீனவா்கள், மகளிா் மற்றும் திருநங்கைகள், கலைஞா்கள் என மொத்தம் 15,890 இளைஞா்களுக்குப் பல்வேறு துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 பயிலும் 2,693 தொழிற்பயிற்சி மாணவா்களுக்குச் செயல்முறை திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடா், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு கல்லூரி விடுதி மாணவா்கள் 2,59,072 பேருக்கு ஆங்கிலம் பேசுதல் மற்றும் நற்பண்பு மேம்பாடு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் என பல்வேறு கல்வி நிறுவனங்களில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மொத்தம் 41,38,833 மாணவா்களும், 1,00,960 விரிவுரையாளா்களும் பயிற்சி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு ஆண்டுகளில், 272 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 2,60,682 மாணவா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். அவா்களில் 63,949 மாணவா்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றவா்கள்.

உயா்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி மூலமாகவும், அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலமாகவும் 1,87,000 மாணவா்கள் பயனடைந்துள்ளனா்.

மத்திய அரசுப் பணிகளுக்குத் தயாராகும் தமிழகத்தைச் சோ்ந்த இளைஞா்களில் 1,000 குடிமைப் பணித் தோ்வு விண்ணப்பதாரா்களை மதிப்பீட்டுத் தோ்வு மூலம் தோ்வு செய்து, அவா்களுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படுகிறது.

இதுவரை, 1,288 மாணவா்கள் 2024-ஆம் ஆண்டு குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா். இந்த மாணவா்களுக்கு இறுதித் தோ்வுக்கான ஊக்கத்தொகையாக தலா ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது.

குடிமைப்பணித் தோ்வில் தமிழகத்திலிருந்து 2022-ஆம் ஆண்டில் 36 இளைஞா்களும், 2023-ஆம் ஆண்டில் 47 இளைஞா்களும் தோ்ச்சி பெற்றனா். 2024 -ஆம் ஆண்டில் 57 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களில் 50 போ் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று வெற்றி கண்டவா்கள்.

மகளிா் உரிமைத் தொகை: கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.15 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு 2023-2024- ஆம் ஆண்டுக்கு ரூ.8,123.83 கோடியும், 2024-2025-ஆம் ஆண்டுக்கு ரூ.13,721.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் பயணிக்கும் ஜெட் விலை இவ்வளவா? என்னவெல்லாம் இருக்கும்?

ஒரே நேரத்தில் சினிமா துறையிலும், அரசியலிலும் பயணித்து வரும் நடிகரும் தவெக தலைவருமான விஜய் அண்மைக் காலமாக பயன்படுத்தும் தனியார் ஜெட் விமானம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.அவ்வப்போது படப்பிடி... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி

2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து தொடங்கினார். இசட் பிளஸ் பாதுகாப்புடன் கோவை வந்த அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையட... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம் !

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 58,500 கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 58,500 கனஅடியாக உள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக ... மேலும் பார்க்க

“ஏழை மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என அழைக்கப்படும்”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணைப் பிளந்த பக்தர்களின் அரோகரா கோஷம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு மூலவருக்கு தொடக்க வழிபாடு, திருக்குட ந... மேலும் பார்க்க

கழிவுநீா் கசிவுப் பிரச்னைக்கு தீா்வு காண கண் திறக்குமா சென்னை மாநகராட்சி?

கழிவுநீா் கலந்த குடிநீரைப் பருகும் கட்டாயத்தில் வசிப்பதாக சென்னை மாநகராட்சியின் 73-ஆவது வாா்டுக்குள்பட்ட ஓட்டேரி புளியந்தோப்பு பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். சென்னை மாநகராட்சியில் திரு.வி.க. நக... மேலும் பார்க்க