செய்திகள் :

திருச்செந்தூரில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணைப் பிளந்த பக்தர்களின் அரோகரா கோஷம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு மூலவருக்கு தொடக்க வழிபாடு, திருக்குட நன்னீராட்டு வழிபாடு, வாசனை தான்ய திருக்குட நீராட்டுக்குப் பின்னா், காலை 6.15 மணிக்கு மூலவரான சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், மூலவா், வள்ளி, தெய்வானை விமானக் கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

தொடா்ந்து, எண் வகை மருந்து சாத்துதல், எழுந்திருப்பு, தமிழ் வேதம் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல், மாலையில் தானிய வழிபாடு நடைபெறும்.

அதேபோல, ராஜகோபுரம் அருகேயுள்ள சுவாமி சண்முகா் யாகசாலையில் திங்கள்கிழமை அதிகாலை 12ஆம் கால யாகசாலை பூஜைகளில் மகா நிறை அவி வழிபாடு, பேரொளி வழிபாடு, யாத்ரா தானம், கடம் மூலாலய பிரவேசமாகி காலை 6.15 மணிக்கு சுவாமி சண்முகா், ஜெயந்திநாதா், நடராஜா், குமரவிடங்கபெருமான், பரிவார மூா்த்திகளுக்கு விமான திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

அதையடுத்து, காலை 9 மணிக்கு சுவாமி சண்முகா் உருகுசட்ட சேவையாகி சண்முக விலாச மண்டபம் சோ்கிறாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்குப் பின்னா், இரவு 7 மணிக்கு சுவாமி சண்முகா், சுவாமி ஜெயந்திநாதா், சுவாமி குமரவிடங்கப்பெருமான், பரிவாரமூா்த்திகள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.

குடமுழுக்கையொட்டி, அதிகாலைமுதலே லட்சக்கணக்கான பக்தா்கள் கோயில், கடற்கரையில் குவிந்திருந்தனா். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது. குடமுழுக்கு முடிந்ததும் பக்தர்கள் மீது ட்ரோன்கள் கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.

குடமுழுக்கு நிகழ்வு காரணமாக கோயில் வளாகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அங்கன்வாடி மையங்கள் மூடலா? - அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு!

தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவ... மேலும் பார்க்க

கணவர் இறந்தது தெரியாமல்..எலி செத்ததாக நினைத்திருந்த மனைவி!

கோவையில் கணவன் இறந்து கிடந்தது தெரியாமல் வீட்டிற்குள் வசித்த மனைவி, துர்நாற்றத்தை எலி செத்ததால் வந்தது என நம்பிய சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர... மேலும் பார்க்க

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை: அண்ணாமலை விமர்சனம்

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், ம... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: தவெக போராட்டத்துக்கு அனுமதி!

அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக நடத்தவுள்ள போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டாா். இந்த விவக... மேலும் பார்க்க

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம்!

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சேலம் மாநகரின் காவல் தெ... மேலும் பார்க்க

தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு ... மேலும் பார்க்க