செய்திகள் :

அஜித்குமார் கொலை வழக்கு: தவெக போராட்டத்துக்கு அனுமதி!

post image

அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக நடத்தவுள்ள போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டாா். இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மாற்றக் கோரியும் தவெக தரப்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அன்றைய நாளில் அந்த இடம் வேறு காரணத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆகையால், புதன்கிழமை (ஜூலை 3) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்துக்கு காவல்துறையினரிடம் தவெகவினர் அனுமதி கோரிய நிலையில், இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினரை அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மனு அளித்தனர்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்ட நிலையில், நீதிபதி வேல்முருகன் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று(ஜூலை 7) விசாரணைக்கு வந்த நிலையில், தவெக போராட்டத்துக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவையடுத்து, காவல் துறையும் தவெகவினரின் போராட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை சிவானந்தா சாலையில் போராட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The police department has granted permission for the protest planned by TVK regarding the Ajith Kumar murder case.

இதையும் படிக்க: அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன்? முன்னாள் தலைமை நீதிபதி விளக்கம்

தமிழகத்தில் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் சாலை, மேம்பால பணிகளுக்காக ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை இன்று(ஜூலை 7) வெளியிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 3,268 கி.மீ. சாலை மற்றும் மேம்பால பணிகளுக்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்கள் மூடலா? - அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு!

தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவ... மேலும் பார்க்க

கணவர் இறந்தது தெரியாமல்..எலி செத்ததாக நினைத்திருந்த மனைவி!

கோவையில் கணவன் இறந்து கிடந்தது தெரியாமல் வீட்டிற்குள் வசித்த மனைவி, துர்நாற்றத்தை எலி செத்ததால் வந்தது என நம்பிய சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர... மேலும் பார்க்க

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை: அண்ணாமலை விமர்சனம்

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், ம... மேலும் பார்க்க

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம்!

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சேலம் மாநகரின் காவல் தெ... மேலும் பார்க்க

தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு ... மேலும் பார்க்க