செய்திகள் :

சிறுபான்மையினருக்கு வழங்குவது சலுகை அல்ல; அடிப்படை உரிமை: ரிஜிஜுவுக்கு ஓவைசி பதில்

post image

சிறுபான்மையினருக்கு அரசு வழங்குவது சலுகை அல்ல; அடிப்படை உரிமை என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவடும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையினரை விட அதிக பாதுகாப்பும் சலுகைகளும் சிறுபான்மையினருக்கு வழங்கும் ஒரே நாடு இந்தியாதான் என பாஜக மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓவைசி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஓவைசி குறிப்பிட்டுள்ளதாவது,

''நீங்கள் (கிரண் ரிஜிஜு) இந்தியக் குடியரசின் அமைச்சர்; மன்னர் அல்ல. ஜனநாயகரீதியான பதவியில் நீங்கள் இருக்கிறீர்கள். சிம்மாசனத்தில் அல்ல. சிறுபான்மையினரின் உரிமை சலுகை அல்ல; அவர்களுக்கான அடிப்படை உரிமை'' எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்திய சிறுபான்மையினர் இரண்டாம்தர குடிமக்களாகக் கூட கருதப்படுவதில்லை; அவர்கள் அகதிகளாகவே நடத்தப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள ஓவைசி, ''ஹிந்து மத அறநிலையத் துறை வாரியங்களில் முஸ்லிம்கள் இடம்பெற முடியுமா? ஆனால், வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்கவும் பெரும்பான்மை பெறவும் வழிவகை செய்கிறது.

மெளலானா ஆசாத் ஃபெல்லோஷிப்பை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. இது அனைத்தும் முஸ்லிம் மாணவர்கள் பலன் அடைகின்றனர் என்பதற்காகவே செய்யப்படுகிறது. மற்ற நாடுகளில் உள்ள மற்ற சிறுபான்மையினரை ஒப்பிட்டு நாங்கள் எதையும் கேட்கவில்லை. நாட்டில் பெரும்பான்மையினர் பெற்றுவரும் பலன்களையும் நாங்கள் கேட்கவில்லை. அரசியலமைப்பு என்ன நிர்ணயித்துள்ளதோ அதுவே எங்கள் கோரிக்கையாக உள்ளது. சமூகம், பொருளாதார மற்றும் அரசியல் நீதி கேட்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து: சீனா கடும் அதிருப்தி!

AIMIM party leader and MP Asaduddin Owaisi has said that the government's provision of benefits to minorities is not a privilege; it is a fundamental right.

சீனாவிடம் உதவி பெற்றோமா? பாகிஸ்தான் ராணுவ தளபதி மறுப்பு

இந்தியா உடனான மோதலின்போது எவ்வித வெளிப்புற உதவிகளையும் பாகிஸ்தான் பெறவில்லை என அந்நாட்டின் ராணுவ தளபதி அஸிம் முனீர் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் கு... மேலும் பார்க்க

தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து: சீனா கடும் அதிருப்தி!

திபெத் விவகாரத்தை சீனா கவனமாக கையாள்வதால் இதில் இந்தியா தலையிடுவதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது சீன அரசு. ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 6) 90-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய தலாய் லாமாவுக்கு பிரதமர் ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு! தஹாவூர் ராணாவின் திடுக்கிடும் வாக்குமூலம்!

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் இடையேயான தொடர்பு குறித்து தஹாவூர் ராணா வாக்குமூலம் அளித்துள்ளார்.2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 16... மேலும் பார்க்க

ஜூலை 9ல் போராட்டங்களில் பங்கேற்கும் ராகுல்: பிகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஜூலை 9ல் பாட்னா செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிகாரில் இந்தாண்டு அக்டோபர்- நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று... மேலும் பார்க்க

18 அடி நீள ராஜ நாகம்.. அசால்டாக பிடித்த கேரள வனத்துறை பெண் காவலர்!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழியை பொய்யாக்கி, 18 அடி நீள ராஜ நாகத்தை, அசால்டாகப் பிடித்துள்ளார் கேரள வனத்துறை பெண் காவலர். அந்தப் புகைப்படங்களைப் பார்த்த மக்கள் சமூக வலைதளத்தில் அவருக்கு பா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு சிவப்பு கம்பளம் விரித்த கேரள அரசு: பாஜக

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாகக் கைது செய்யப்பட்ட ஜோதி மல்ஹோத்ராவுக்கு கேரள சுற்றுலாத் துறைக்கு இடையேயான தொடர்பை பாஜக விமர்சித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில... மேலும் பார்க்க