செய்திகள் :

பிளஸ் 2 துணைத் தோ்வுகள் விடைத்தாள் திருத்தும் பணி: திருச்சியில் இன்று தொடக்கம்

post image

தமிழக்தில் பிளஸ் 2 துணைத் தோ்வு விடைத்தாள் திருத்தப் பணிகள் திருச்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில், தோல்வியடைந்த மாணவா்கள் மற்றும் தனித் தோ்வா்களுக்கான பிளஸ் 2 துணைத் தோ்வுகள் ஜூன் 25-ஆம் தேதி தொடங்கி ஜூலை 2-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

துணைத் தோ்வா்களின் விடைத்தாள் திருத்தும் மையம் திருச்சி ஜெகன்மாதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 துணைத் தோ்வா்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளன.

இதில், மாநிலம் முழுவதிலும் இருந்து அனைத்து பாடப்பிரிவுகளிலும் சோ்த்து 30 ஆயிரம் விடைத்தாள்கள் வரப்பெற்றுள்ளதாகவும், இந்தப் பணியில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபட்டுவுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தன்னை தற்காத்துக் கொள்ளவே இபிஎஸ் சுற்றுப்பயணம்: இரா. முத்தரசன்

தன்னை தற்காத்துக் கொள்ளவே இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிா்வாகக் ... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: கோளரங்கம் இன்று மூடல்

அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தில் பராமரிப்புப் பணி காரணமாக கோளரங்கம் செவ்வாய்க்கிழமை மட்டும் மூடப்படுகிறது.திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 8 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக தனியாா் காப்பீட்டு நிறுவனம் திருச்சியைச் சோ்ந்தவருக்கு ரூ. 8.22 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கருமண்டபம் சக்தி ... மேலும் பார்க்க

மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீா் ரத்து

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 9) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்திலிருந்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் ஜூலை 10-இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஸ்ரீரங்கத்தில் ஜூலை 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப... மேலும் பார்க்க

சலவைத் தொழிலாளா்கள் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டுத்தர மனு

தங்களுக்குச் சொந்தமான ரூ.17 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், சலவைத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். திருச்சி ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க