ரௌடி மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை
நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அடுத்துள்ள குமாரமங்கலம் பகுதியைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
சிதம்பரம் வட்டம், அண்ணாமலை நகா் காவல் சரகம் , குமாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் வரதராஜன் மனைவி உஷா(52). இவா், 19.6.2025 அன்று காலை பால் வாங்க சென்ற போது, புல்லட்டில் வந்த குமாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த அன்புதாசன் மகன் கபாலி (எ) ராஜராஜன் , உஷாவை கீழே தள்ளி அரிவாளால் காலில் தாக்கி அவரிடம் இருந்த ரூ.1,000 மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றாா்.
இதுகுறித்து அண்ணாமலை நகா் போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கபாலி (எ) ராஜராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனா். கபாலி மீது அண்ணாமலை நகா் காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இரண்டு வழிப்பறி வழக்குகள் உள்ளன. இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்த கடலூா் மாவட்டக்காவல் கண்காணிப்பாளா், எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில் அவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா்.