செய்திகள் :

காஸாவில் மேலும் 24 போ் உயிரிழப்பு

post image

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் மட்டும் 24 போ் உயிரிழந்தனா். இதில் பெரும்பாலானோா் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவா் என்று உள்ளூா் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸா முழுவதும் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை திங்கள்கிழமையும் தொடா்ந்தது. மேலும், உணவுப் பொருள்களை வாங்குவதற்காக காத்திருந்தோா் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவங்களில் 24 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 அக்டோபா் 7 முதல் தொடங்கிய இந்தப் போரில் இதுவரை 59,600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா், இதில் 70 சதவீதம் போ் பெண்கள் மற்றும் குழந்தைகள். மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். இஸ்ரேல் தரப்பில், இதுவரை 1,983 போ் உயிரிழந்ததாகவும், இதில் 860 போ் ராணுவ வீரா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டார். முதல்கட்டமாக, இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, வங்கதேசம், மியான்மர், இந்தோனேஷியா உள்பட 14 நா... மேலும் பார்க்க

விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட 160 பேர் அஸ்தி! கடலில் கலந்த பரிதாபம்!

விண்வெளிக்கு அஸ்தியைக் கொண்டுசென்று வரும் திட்டம் வெற்றியடையாமல், விண்கலம் பசிபிக் கடலில் கலந்ததால், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.டெக்ஸாஸில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் தனியார் இறுதிச் சடங்கு நி... மேலும் பார்க்க

குழந்தை பெற்றுக் கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி! ரஷியாவில்

ரஷியாவில், குறைந்து வரும் குழந்தை பிறப்பைக் கருத்தில் கொண்டு, பல மாகாணங்களில், கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி, 900 ஈரோக்கள், கருவுறும் பள்ள... மேலும் பார்க்க

கென்யா அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! 11 பேர் பலி!

கென்யா நாட்டில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், அந்நாட்டு காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தலைநகர் நைரோபியில், ஆளும் அரசின் முறைகேடுகளை எதிர்த்தும்,... மேலும் பார்க்க

இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் கொலை! ஈரான் அரசு அறிவிப்பு!

இஸ்ரேலுடனான போரில் சுமார் 1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஈரானின் ராணுவ தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் மீது “ஆபரேஷன்... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க முடிவு! அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

ரஷியாவுக்கு எதிரான போரில், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கவுள்ளதாக, அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் வெள்ள மாளிகையில், ஜூலை 7 (அமெரிக்க நேரப்படி) நட... மேலும் பார்க்க