செய்திகள் :

இலங்கைத் தமிழா்களுக்கு புதிதாக 729 புதிய வீடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

post image

சென்னை: இலங்கைத் தமிழா் முகாம்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக புதிய வீடுகளை அவா் திறந்தாா்.

தமிழகத்தில் இலங்கைத் தமிழா்கள் வசிக்கும் வீடுகளில் பழுதடைந்த நிலையிலுள்ள 7,469 வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி, 26 மாவட்டங்களிலுள்ள அந்த வீடுகளை மீண்டும் சீரமைத்துக் கட்டுவதற்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதில் முதல்கட்டமாக 3,510 புதிய வீடுகள் ரூ.180.34 கோடி செலவில் கட்ட முடிவு செய்யப்பட்டன. ஏற்கெனவே, 18 மாவட்டங்களில் 2,781 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு, திருப்பூா் மாவட்டம் திருமூா்த்தி நகா், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை மற்றும் கேசா்குளி அணை, விருதுநகா் மாவட்டம் கண்டியாபுரம் ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழா்களுக்காக 729 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. அவற்றை காணொலிக் காட்சி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், சா.மு.நாசா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், பொதுத் துறை செயலா் ரீட்டா ஹரிஷ் தக்கா், அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையா் மா.வள்ளலாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ. 10,000-க்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு நபர்... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து அதிர்ச்சியளிக்கிறது: தவெக தலைவர் விஜய்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட் பகுதியில் நடந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியும் மன வேதனையையும் அளித்ததாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க