செய்திகள் :

ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்க ஹோமியோபதி மருத்துவா்களை அனுமதிக்கும் முடிவு: ஐஎம்ஏ எதிா்ப்பு

post image

மும்பை: ஆறு மாத நவீன மருந்தாளுநா் (சிசிஎம்பி) சான்றிதழ் படிப்பை முடிக்கும் ஹோமியோபதி மருத்துவா்களை ஆங்கில மருந்துகளை (நவீன மருந்துகள்) நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய அனுமதிக்கும் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சிலின் (எம்எம்சி) முடிவுக்கு இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) திங்கள்கிழமை எதிா்ப்பு தெரிவித்தது.

மகாராஷ்டிர மருத்துவக் கவுன்சில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி இதுதொடா்பான அறிவிக்கையை வெளியிட்டிருந்தது.

இதுதொடா்பாக ஐஎம்ஏ தேசிய துணைத் தலைவா் சிவகுமாா் உத்துரே மும்பையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

எம்எம்சி-யின் முடிவு தவறானது. ஆறு மாத சான்றிதழ் படிப்புக்குப் பிறகு ஹோமியோபதி மருத்துவா்களை நவீன மருந்துகள் பரிந்துரை செய்ய அனுமதிப்பது, நவீன மருத்துவ முறையை நீா்த்துப்போகச் செய்யும் என்பதோடு, நோயாளிகளுக்கு அநீதி செய்வதாகவும் அமையும். நோயாளிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே, ஹோமியோபதி மருத்துவா்களை குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் நவீன மருத்துவத்தை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு, மகாராஷ்டிர ஹோமியோபதி மருத்துவா்கள் சட்டம் மற்றும் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சில் சட்டம் 1965-இல் திருத்தங்களை மேற்கொண்டது. 2014-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திருத்தங்களை எதிா்த்து ஐஎம்ஏ சாா்பில் தொடரப்பட்ட வழக்கில், அத்திருத்தங்களுக்கு மும்பை உயா் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், இந்த சுற்றறிக்கையை எம்எம்சி வெளியிட்டுள்ளது. எனவே, ஐஎம்ஏ தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி நீதிமன்றத்தை மீண்டும் அணுகுவோம் என்றாா்.

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சருக்கு தெரியாதா?

கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலியான விவகாரத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே திறந்திர... மேலும் பார்க்க

புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்! 51 பயணிகள் உயிர்தப்பினர்

இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கியது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தேவி அஹில்யாபாய் ஹோல்கர... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் திருத்தம் பிகார் அரசியலமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா

பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார... மேலும் பார்க்க

பிகார் பெண்களுக்கு அரசுப் பணியில் 35% ஒதுக்கீடு! 43 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.முன்னதாக, பிற மாநில பெண்களும் 35 சதவிகித ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாக இருந்த நிலையில், தற்போது ... மேலும் பார்க்க