செய்திகள் :

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சருக்கு தெரியாதா?

post image

கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலியான விவகாரத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே திறந்திருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது செவ்வாய்க்கிழமை காலை ரயில் மோதி கோர விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 2 மாணவர்கள், 1 மாணவி உள்பட மூவர் பலியாகினர்.

மேலும், பள்ளி வேனின் ஓட்டுநர், இரண்டு மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரயில்வே அமைச்சர் எங்கே?

தமிழகத்தை உலுக்கியுள்ள ரயில் விபத்து குறித்து இதுவரை பிரதமர் நரேந்திர மோடியோ, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவோ ஒருவார்த்தைகூட பேசவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் என்ற வாதத்தை முன்வைத்தாலும், ரயில்வே துறைக்கு பொறுப்பாகவுள்ள மத்திய அமைச்சர் எங்கே? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மூத்த மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்பட யாரும் இதுவரை சமூக வலைதளங்களில்கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.

(தெற்கு ரயில்வே தரப்பில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது)

யார் காரணம்?

இந்த விபத்து குறித்து தெற்கு ரயில்வே முதலில் வெளியிட்ட அறிக்கையில், ரயில்வே கேட்டை கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மூடியதாகவும், பள்ளி வேன் ஓட்டுநர் கேட்டுக்கொண்டதால் திறந்ததாக வெளியிடப்பட்டது. ஆனால், அதே அறிக்கையை திருத்தி இரண்டாவதாக வெளியிட்ட போது, கேட்டை மூடும்போது, வேன் ஓட்டுநர் மூட வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே அறிக்கையிலேயே முன்னுக்குப்பின் முரணாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, காலை 7.10 மணிக்கு ரயில் வருவது தெரிந்து 7.06 மணிக்கு கேட்டை பூட்டியதாகவும், இருசக்கர வாகன ஓட்டிகள் அழுத்தத்தின் காரணமாக கேட் கீப்பர் மீண்டும் திறந்ததாகவும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஆனால், வேன் வந்தபோது ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது என்று வேன் ஓட்டுநர், காயமடைந்து சிகிச்சையில் உள்ள மாணவன் மற்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

இதில், யார் சொல்வது உண்மை என்பது ஒருபுறம் இருக்க, ரயில் வருவதை அறிந்தும் கேட்டை திறந்து வைத்திருந்தது / திறந்தது கேட் கீப்பரின் குற்றம் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Union Railway Minister Ashwini Vaishnav has not yet expressed condolences over the death of school students after a train hit a private school van near Cuddalore.

இதையும் படிக்க : கடலூர் விபத்தில் 3 பேர் பலி: தமிழ் தெரியாத வடமாநில கேட் கீப்பர்!

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க