செய்திகள் :

வெங்காயம் கலந்த உணவு பரிமாறியதால் ஹோட்டலை அடித்து நொறுக்கிய பக்தர்கள்!

post image

புனித யாத்திரை சென்ற பக்தர்களுக்கு வெங்காயம் கலந்த உணவு பரிமாறிய ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திங்கள்கிழமை(ஜூலை 7) இரவு, பர்காஸி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தில்லி - ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில் ஃபலௌடா புறவழிச்சாலை அருகே செயல்பட்டு வந்த ஒரு தாபாவில்(சாலையோர உணவுக் கடை) உணவருந்திய கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற கான்வர் யாத்திரை பக்தர்கள் 20 பேர் அடங்கிய ஒரு குழுவுக்கு வழங்கப்பட்ட உணவில் வெங்காயமும் கலந்திருந்ததால் அவர்கள் அனைவரும் ஆத்திரமடைந்தனர்.

பக்தர்களுக்கு வெங்காயம் கலந்த உணவு கொடுக்கப்பட்டதால் அவர்கள் கோபத்தில் கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்ததாகவும், அதன்பின் கடையிலிருந்த நாற்காலிகள் மேஜைகளை தாக்கி சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து யார் மீதும் எந்த தரப்பும் புகார் தெரிவிக்காததால் வழக்கு பதியப்படவில்லை என்ரும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலூர் ரயில் விபத்து: மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் அஞ்சலி!

கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன், ரயி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளின் மீண்டும் நிறம் மாற்றம் ஏன்..?

சென்னை: அரசு பேருந்துகளின் நிறத்தை மீண்டும் மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். தமிழகத்தில் அரசு போக்குவரத... மேலும் பார்க்க

நைஜீரியா: சாலை விபத்தில் 21 போ் உயிரிழப்பு

லாகோஸ்: நைஜீரியாவின் வடமேற்கு கானோ மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து மத்திய சாலை பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜாரியா-கானோ விரைவுச்... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு ஆா்ஜென்டீனா சிறப்பு கெளரவம்

பியூனஸ் அயா்ஸ்: பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் ஜார்ஜ் மேக்ரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’(கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற சிறப்பு கெளரவம் வழங்கி கெளரவித்தா... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் – தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பல ஆண்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வா் அறிவிப்பு

சென்னை: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுதொடா்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:விருது... மேலும் பார்க்க