செய்திகள் :

கடலூர் ரயில் விபத்து: மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் அஞ்சலி!

post image

கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திராவிடமணி என்பவரின் மகள் சாருமதி (16), மகன் செழியன்(15), விஜயசந்திரகுமார் என்பவரின் மகன் விமலேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், 3 பள்ளி மாணவர்கள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து விபத்தில் பலியான மாணவர்களின் உடல் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாணவர்களின் உறவினர்கள், நண்பர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் சென்று, மாணவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழக அரசு சார்பிலும் ரயில்வே சார்பிலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Minister C.V. Ganesan pays tribute to students who died in the Cuddalore train accident.

போரை நிறுத்தியதாக 21-வது முறை கூறிய டிரம்ப்! எப்போது மௌனம் கலைப்பார் மோடி? - காங்கிரஸ்

வெங்காயம் கலந்த உணவு பரிமாறியதால் ஹோட்டலை அடித்து நொறுக்கிய பக்தர்கள்!

புனித யாத்திரை சென்ற பக்தர்களுக்கு வெங்காயம் கலந்த உணவு பரிமாறிய ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திங்கள்கிழமை(ஜூலை 7) இரவு, பர்காஸி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தில்லி - ஹரித்வார் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளின் மீண்டும் நிறம் மாற்றம் ஏன்..?

சென்னை: அரசு பேருந்துகளின் நிறத்தை மீண்டும் மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். தமிழகத்தில் அரசு போக்குவரத... மேலும் பார்க்க

நைஜீரியா: சாலை விபத்தில் 21 போ் உயிரிழப்பு

லாகோஸ்: நைஜீரியாவின் வடமேற்கு கானோ மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து மத்திய சாலை பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜாரியா-கானோ விரைவுச்... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு ஆா்ஜென்டீனா சிறப்பு கெளரவம்

பியூனஸ் அயா்ஸ்: பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் ஜார்ஜ் மேக்ரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’(கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற சிறப்பு கெளரவம் வழங்கி கெளரவித்தா... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் – தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பல ஆண்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வா் அறிவிப்பு

சென்னை: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுதொடா்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:விருது... மேலும் பார்க்க