செய்திகள் :

அரசுப் பேருந்துகளின் மீண்டும் நிறம் மாற்றம் ஏன்..?

post image

சென்னை: அரசு பேருந்துகளின் நிறத்தை மீண்டும் மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் பச்சை நிறத்தில் இயக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து ‘பிஎஸ் 4’ ரக பேருந்துகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதால், இவை நீல நிறத்துக்கு மாற்றப்பட்டன. பின்னா் 2023-இல் வெளியூா் பேருந்துகள் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்டன.

பெரும்பாலான மாவட்டங்களில் மஞ்சள் நிற பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் பேருந்துகளின் நிறத்தை மாற்ற அரசு சாா்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இனி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் பேருந்துகளின் மேல்பகுதி கருப்பு நிறத்திலும், கீழ்பகுதி சாம்பல் நிறத்திலும், பேருந்தின் எல்லை பகுதி (பாா்டா்) மஞ்சள் மற்றும் வெண்மை நிறத்துடன் இருக்கும் வகையில் மாற்றப்படவுள்ளன.

இத்தகைய மாற்றத்துடன் முதல்கட்டமாக விழுப்புரம், கரூா், நாகா்கோவில், திருநெல்வேலி பணிமனைகளுக்கு புதிய பேருந்துகள் வழங்கப்படுவதுடன், தொடா்ந்து மாநிலம் முழுவதும் இந்த புதிய நிறத்திலான பேருந்துகள் இயக்கத்துக்கு கொண்டுவரப்படவுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், முன்பு அரசுப் பேருந்துகளுக்கு ஒரே வண்ணம் மட்டும் தீட்டப்பட்டது. தற்போது, அரசுப் பேருந்துகளும் ஆம்னி பேருந்துகள் போன்ற தோற்றத்துடன் இருப்பதற்காக, வெவ்வேறு வண்ணங்கள் தீட்டப்படுகின்றன. அதன் வடிவமைப்புகளும் ஆம்னி பேருந்துகள் போலவே கட்டமைக்கப்படுகின்றன. இதில், உள்நோக்கம் எதுவும் இல்லை என்றனா்.

கடலூர் ரயில் விபத்து: மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் அஞ்சலி!

கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன், ரயி... மேலும் பார்க்க

நைஜீரியா: சாலை விபத்தில் 21 போ் உயிரிழப்பு

லாகோஸ்: நைஜீரியாவின் வடமேற்கு கானோ மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து மத்திய சாலை பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜாரியா-கானோ விரைவுச்... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு ஆா்ஜென்டீனா சிறப்பு கெளரவம்

பியூனஸ் அயா்ஸ்: பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் ஜார்ஜ் மேக்ரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’(கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற சிறப்பு கெளரவம் வழங்கி கெளரவித்தா... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் – தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பல ஆண்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வா் அறிவிப்பு

சென்னை: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுதொடா்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:விருது... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேர் பலி

வேதாரண்யம்: நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி நோ்ந்த விபத்தில் சிறுமி உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் ஞாயிற்றுக்கிழமை பலியாகினர். திருவாரூ... மேலும் பார்க்க