செய்திகள் :

ஹிருத்திக் ரோஷனிடம் அதிகம் கற்றுக்கொண்டேன்: ஜூனியர் என்டிஆர்

post image

வார் - 2 படத்தில் ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 150 நாள்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு 5 நாடுகளில் நடைபெற்றன.

யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் வார் - 2 படத்தில் நடித்திருந்தார்கள்.

2019ஆம் ஆண்டு வெளியான வார் படத்தின் முதல் பாகம் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வருகிற ஆக. 14 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:

வார் 2 படப்பிடிப்பு முடிந்தது. இந்தப் படத்திலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

ஹிருத்திக் ரோஷன் சார் உடன் படப்பிடிப்பில் இருந்த நாள்கள் எல்லாம் சரவெடிதான். அவரது ஆற்றலை நான் எப்போதும் வியக்கும் ஒன்று. வார் 2 பயணத்தில் நான் அவரிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.

அயன் முகர்ஜி அற்புதமானவர். ரசிகர்களுக்கு ஆச்சரியங்களை வைத்திருக்கிறார். படத்தை திரையில் காண ஆவலாக காத்திருக்கிறேன் என்றார்.

Jr NTR and Hrithik Roshan have wrapped up shooting for War 2.

பளுதூக்குதல்: சாய்ராஜுக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்ராஜ் பர்தேசி செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்னாட்ச் பிர... மேலும் பார்க்க

தென்னிந்திய கபடி: எஸ்ஆர்எம் பல்கலை. சாம்பியன்

மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதியில் நடைபெற்ற தென்னிந்திய ஆடவர் கபடிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. வடுவூர் மேல்பாதி ஏஎம்சி கபடி கழகம் சார்பில், தென்னிந்திய ... மேலும் பார்க்க

ரூ.2,306 கோடியாக உயர்ந்த ஆர்சிபி பிராண்ட் மதிப்பு

ஐபிஎல் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.2,306 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நட்சத்திர வீரர் விராட் கோலி அங்கம் வகிக்கும் பெங்களூரு... மேலும் பார்க்க

மகளிர் ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தற்போது டி20 தொடரில் விளைய... மேலும் பார்க்க

சின்னா், ஜோகோவிச் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரா்களான இத்தாலியின் யானிக் சின்னா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் ரவுண்ட் ஆஃப் 16-இல் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றனா். ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந... மேலும் பார்க்க

நாளை முதல் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி வியாழக்கிழமை (ஜூலை 10) தொடங்கி, வரும் 20-ஆம் தேதி வரை சென்னை மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இப... மேலும் பார்க்க