செய்திகள் :

வாக்காளர் பட்டியல் திருத்தம் பிகார் அரசியலமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா

post image

பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

1.50 கோடிக்கும் மேற்பட்ட பிஹாரிகள் தங்கள் மாநிலத்தை விட்டு வெளி மாநிலத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் எவ்வாறு தங்களது குடும்ப விவரங்களைப் பதிவு செய்வார்கள்? எப்படி வாக்களிப்பார்கள்? இறந்த பெற்றோருக்கான சான்றிதழ்களை எங்கே பெறுவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குல்காமில் ஒரு கட்சி நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது செய்தியாளர்களிடம் பேசினார்.

அம்பேத்கரால் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, ​​அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை இருந்தது. அதன்பின்னர், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காகத் திருத்தப்பட்டது.

இன்று, தேர்தல் ஆணையம் அரசியலமைப்பிற்கு எதிரான ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. யாரை மகிழ்விக்க இந்த முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

இந்த சூழ்ச்சிகளை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மக்கள் விழித்தெழ வேண்டிய நேரம் வந்துவிட்டது. தொடர்ந்து சூழ்ச்சிகளில் ஈடுபட்டால் அரசியலமைப்பைக் காப்பற்ற போராட்டம் நடைபெறும். அது முந்தைய போராட்டத்தை விட பெரியளவில் இருக்கும்

ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் பிகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தல்களை வெளியிட்டது, இதில் தகுதியற்ற பெயர்களை நீக்கி, தகுதியான குடிமக்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதாகத் தெரிகிறது.

பிகாரில் கடைசியாக 2023ல் திருத்தம் செய்யப்பட்டது. மாநிலத்தில் பேரவைத் தேர்தல் இந்தாண்டின் நவம்பர்- டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளன.

National Conference president Farooq Abdullah on Tuesday termed as "anti-Constitutional" the decision of the Election Commission to undertake special intensive revision of electoral rolls in poll-bound Bihar.

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க