செய்திகள் :

பிகார் பெண்களுக்கு அரசுப் பணியில் 35% ஒதுக்கீடு! 43 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

post image

பிகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

முன்னதாக, பிற மாநில பெண்களும் 35 சதவிகித ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாக இருந்த நிலையில், தற்போது பிகாரைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பல திட்டங்களை அறிவித்துள்ளது.

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் இன்று காலை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் 43 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் சித்தார்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் நலதிட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் என 43 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, பிகார் மாநில இளைஞர் ஆணையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள், பணிபுரியும் இளைஞர்கள், உயர்கல்வி உதவி தேவைப்படும் இளைஞர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் இந்த ஆணையம் செயல்படவுள்ளது. 18 வயது முதல் 45 வயது வரையிலான இளைஞர்களை மையமாகக் கொண்டு இந்த ஆணையம் செயல்படும்.

பிகார் மாநில அரசுப் பணிகளில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேரடி நியமனத்தில் உள்ள அனைத்துப் பதவிகளுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும்.

பருவமழை மற்றும் வறட்சியைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ரூ. 100 கோடி டீசல் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி மற்றும் பிபிஎஸ்சி தேர்வுகளின் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 50,000 மற்றும் ரூ. 1 லட்சம் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Bihar cabinet has decided to provide 35 percent reservation to native women in government jobs.

இதையும் படிக்க : கடலூர் விபத்தில் 3 பேர் பலி: தமிழ் தெரியாத வடமாநில கேட் கீப்பர்!

அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 இந்தியா்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் காா் மீது சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 இந்தியா்கள் உயிரிழந்ததாக இந்தியாவில் உள்ள அவா்களது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்தவா்கள் தெல... மேலும் பார்க்க

அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியதே வாக்காளா் பட்டியல் திருத்தம்: தோ்தல் ஆணையம் விளக்கம்

பிகாா் மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. வாக்காளா... மேலும் பார்க்க

17 மருந்துகளை கழிவறையில் கொட்டி அழிக்கலாம்: சிடிஎஸ்சிஒ வழிகாட்டுதல் வெளியீடு

வீட்டு கழிவறைகளில் கொட்டி அப்புறப்படுத்துவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஃபென்டனைல் உள்ளிட்ட வலிபோக்கும் மருந்... மேலும் பார்க்க

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க