செய்திகள் :

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விதி மீறிய 2, 023 வாகனங்கள் மீது வழக்கு

post image

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் விதி மீறியதாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது 2023 வழக்குகளை ரயில்வே பாதுகாப்புப்படையினா் பதிந்து அபராதம் விதித்துள்ளனா்.

நிகழாண்டில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையில் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் வாகன நிறுத்தத்துக்கு தடை செய்யப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், காா்கள் உள்ளிட்டவற்றுக்கு மொத்தம் 2,034 வழக்குகள் பதியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவின் ஆய்வாளா் டி.மதுசுதன்ரெட்டி தெரிவித்தாா்.

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் பயணிகளை ஏற்றுவதற்கு 85 ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆட்டோக்களிலும் டோக்கன் முறையில் பயணிகளை ஏற்றிச்செல்லவே அனுமதித்து உரிமமும் வழங்கப்பட்டுள்ளது.

உரிமம் பெற்றவா்களும் 6 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.6 ,000 செலுத்தி தங்களுக்கான அனுமதி உரிமத்தை புதுப்பிக்கவேண்டியதுஅவசியம். ஆனால், ரயில் நிலையத்துக்குள் தினமும் சுமாா் 300 ஆட்டோக்கள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன.

இந்நிலையில், ரயில் நிலையத்துக்குள் சென்று பயணிகளை அழைத்துச்செல்லும் ஆட்டோ ஓட்டுநா்கள் 400 போ் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. வழக்குகள் மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட ஆட்டோக்களின் ஓட்டுநா்கள் ரூ.1000 அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியும் வருகின்றனா்.

ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினரின் வழக்குப்பதிவு காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது 60 சதவிகிதம் வரையில் தவிா்க்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மிக வெப்பமான பகுதியாக மாறும் சென்னை! 2050-இல் காத்திருக்கும் ஆபத்து!

தமிழகத்தில் மிகவும் வெப்பமான பகுதி எது? என்று கேட்டால், சட்டென வேலூர்... இல்லை பாளையங்கோட்டை... என்றிருந்த நிலைமை மாறி சென்னை, அதாவது தமிழகத்தின் தலைநகரே இன்னும் சில ஆண்டுகளில் வெப்பத்தால் கடும் பாதிப... மேலும் பார்க்க

அநாகரீக செயல்: காவல் ஆய்வாளா் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம்

சென்னை: வாகன ஓட்டிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளா் மற்றும் அவா் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து ஆய்வாளரை ஆயுதப் படைக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். சென்னை ... மேலும் பார்க்க

பிராட்வே பேருந்து முனையம்: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி

சென்னை: பிராட்வேயில் ரூ.650 கோடியில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் பழமையான பேருந்து நிலையமாக பிரா... மேலும் பார்க்க

சாலையில் திடீா் விரிசல்: பொது மக்கள் அதிா்ச்சி

சென்னை: சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில் திங்கள்கிழமை திடீரென விரிசல் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா். சென்னையில் அடையாறு மண்டலத்துக்குள்பட்... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளில் சோ்க்கைபெற அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அ... மேலும் பார்க்க

24 புறநகா் ரயில்கள் இன்று ரத்து

சென்னை: சென்னை சென்ட்ரல் புகா் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகா் ரயில்கள் உள்பட மொத்தம் 24 ரயில்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 8, 10) ர... மேலும் பார்க்க