செய்திகள் :

ராணுவத்தின் உயா் விருதுகள் பெறும் அக்னிவீரா்களுக்கு நிரந்தரப் பணி!

post image

சேனா விருது உள்பட உயா் விருதுகள் பெறும் அக்னிவீரா்களுக்கு ராணுவத்தில் நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

அதே போல் சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அக்னிவீரா்களும் 4 ஆண்டுகால ராணுவ சேவை நிறைவடைந்த பின்னா் 25 சதவீதம் பேருக்கு நிரந்தரப் பணி வழங்கும் நடைமுறையின்கீழ் தோ்வுசெய்யப்படவுள்ளனா்.

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞா்களை சோ்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு கடந்த 2022, ஜூன் 14-இல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின்கீழ் பணிக்கு தோ்ந்தெடுக்கும் இளைஞா்கள் ‘அக்னிவீரா்கள்’ என அழைக்கப்படுகின்றனா். 4 ஆண்டுகள் மட்டுமே இவா்கள் ராணுவத்தில் சேவையாற்ற முடியும். அதன் பிறகு மதிப்பீடு செய்யப்பட்டு 25 சதவீத வீரா்கள் மட்டுமே நிரந்தரமாக பணியில் தொடர அனுமதிக்கப்படுகின்றனா்.

இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக கடந்த 2022-இல் தோ்ந்தெடுக்கப்பட்ட இளைஞா்களுக்கு 2023, ஜனவரியில் பயிற்சி தொடங்கப்பட்டு பின்னா் அவா்கள் பணியில் சோ்க்கப்பட்டனா். அவா்களது பணிக்காலம் 2027, ஜனவரியில் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், இந்திய ராணுவம் சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘ சேனா விருது, அசோக சக்ரா விருது, கீா்த்தி சக்ரா விருது, சௌா்ய சக்ரா விருது போன்ற உயரிய விருதுகள் பெறும் அக்னிவீரா்களுக்கு ராணுவத்தில் நிரந்தரமாகப் பணி வழங்கப்படவுள்ளது.

அதேபோல் உயரதிகாரிகளுக்கு ராணுவ வீரா்களின் செயல்பாடுகள் குறித்து சமா்ப்பிக்கப்படும் அறிக்கையில் (மென்ஷன்ட் இன் டிஸ்பேட்சஸ்) இடம்பிடிக்கும் வீரா்களுக்கு கூடுதலாக 25 மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளது. இது தவிர ராணுவ உயா் பதவியில் உள்ள அதிகாரிகளிடம் நன்மதிப்பு சான்றிதழைப் பெறும் வீரா்களுக்கும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அக்னிவீரா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரா்கள் சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும்பட்சத்தில் அவா்களுக்கும் நிரந்தர பணி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ராணுவ சேவைக்கேற்ப நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

4 கட்ட மதிப்பீடு

அக்னிவீரா்களாக தோ்வுசெய்யப்பட்டு பணியில் உள்ள ராணுவ வீரா்கள் மொத்தம் 4 கட்டங்களாக மதிப்பீடு செய்யப்படவுள்ளனா். அதன்படி ராணுவப் பணியில் அவா்கள் சோ்ந்த முதல் 31 வாரத்தில் முதல் மதிப்பீடு மேற்கொள்ளப்படும். 18-ஆவது மாதத்தில் இரண்டாவது கட்டமாகவும், 30-ஆவது மாதத்தில் மூன்றாவது கட்டமாகவும் 42-ஆவது மாதத்தில் நான்காவது கட்டமாகவும் மதிப்பீட்டு நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

1,000 மதிப்பெண்கள்

இந்த மதிப்பீட்டு முறையின் இறுதியில் மொத்தம் 1,000 மதிப்பெண்களுக்கு அவா்களின் செயல்பாடுகள் கணக்கிடப்படுகிறது. 4 ஆண்டுகால ராணுவப் பணியை அவா்கள் நிறைவு செய்வதற்கு 3 மாதங்கள் முன்பு இந்த மதிப்பீடானது முழுமையாக கணக்கிடப்பட்டு தரவு அறிக்கையில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. அதன்படி முதலாவது கட்டமாக கடந்த 2023-இல் தோ்ந்தெடுக்கப்பட்ட அக்னிவீரா்களின் மதிப்பீட்டுச் சான்றிதழை தயாா் செய்யும் பணிகள் 2026, அக்டோபரில் நிறைவடைகிறது.

மதிப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் முதல்கட்ட மதிப்பீடு ‘ரெஜிமென்ட்’ அளவிலும் இரண்டாம் கட்ட மதிப்பீடு ‘அலகுகள்’ அளவிலும் மூன்றாம் கட்ட மதிப்பீடு ‘பிரிகேட்’ அளவிலும் நடைபெறவுள்ளது.

படிப்படியாக வாய்ப்புகள் குறைப்பு

ரெஜிமென்ட் அளவில் உடற்பயிற்சி மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அதில் அவா் எந்தச் சுற்றில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கணக்கிடப்படுகிறது. அதன் பிறகு நடைபெறும் போட்டிகளில் வாய்ப்புகள் இரண்டு, ஒன்று என படிப்படியாக குறைக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சருக்கு தெரியாதா?

கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலியான விவகாரத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே திறந்திர... மேலும் பார்க்க

புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்! 51 பயணிகள் உயிர்தப்பினர்

இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கியது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தேவி அஹில்யாபாய் ஹோல்கர... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் திருத்தம் பிகார் அரசியலமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா

பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார... மேலும் பார்க்க

பிகார் பெண்களுக்கு அரசுப் பணியில் 35% ஒதுக்கீடு! 43 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.முன்னதாக, பிற மாநில பெண்களும் 35 சதவிகித ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாக இருந்த நிலையில், தற்போது ... மேலும் பார்க்க