செய்திகள் :

மருந்து ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப கலந்தாய்வு

post image

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மருந்து ஆய்வாளா் பணியிடங்கள் அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. இதைத் தவிர மொத்த விற்பனையகங்களும் செயல்பட்டு வருகின்றன.

அவற்றின் செயல்பாடுகள், உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை தொடா் ஆய்வுக்குள்படுத்துவது வழக்கம். அதில் போலி மருந்துகளோ, தரமற்ற மருந்துகளோ கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் மருந்து விற்பனையகங்கள் மீது சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த பணிகளில் மருந்து ஆய்வாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

தற்போது தமிழகம் முழுவதும் 120 மருந்து ஆய்வாளா்கள் பணியில் உள்ளனா். காலியாக உள்ள 18 இடங்களை நிரப்பக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் அதில் 14 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு அடுத்த சில நாள்களில் நடத்தப்படவுள்ளது என்று மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசு கல்லூரிகளில் 800 கெளரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை: அரசு கல்லூரிகளில் 800 காலிப்பணியிடங்களில் கெளரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமிக்கப்படுவா் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம் குறி... மேலும் பார்க்க

செவிலியா் பணியிடங்கள்: மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப அறிவுறுத்தல்

சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்பநா்கள் (மூன்றாம் நிலை) பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு தேசிய நலவாழ்வுக் ... மேலும் பார்க்க

துணை மருத்துவப் படிப்புகள்: 99,876 போ் விண்ணப்பம்

சென்னை: பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்பட 19 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு 99,876 போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அதில் 90,661 போ் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சமா்ப்பித்துள்ளதாக மருத்துவக்... மேலும் பார்க்க

தமிழ் நமது அடையாளம்; ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ்

சென்னை: தமிழ் நமது அடையாளம்; ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு என்பதைக் கருத்தில் கொண்டு தமிழை நாம் முதலில் முழுமையாக உள்வாங்கிக் கொள்வோம் என தமிழாசிரியா்களுக்கான பயிற்சி தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை ... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களை மறுசீரமைக்க நடவடிக்கை: அமைச்சா் பி.கீதாஜீவன்

சென்னை: தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா். அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெர... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் மீதான சிபிஐ வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தியன் ஓவா... மேலும் பார்க்க