செய்திகள் :

பங்குச் சந்தை குறித்து அச்சத்தைப் பரப்புகிறாா் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

post image

புது தில்லி: இந்திய பங்குச் சந்தைகள் குறித்து தேவையற்ற அச்சத்தையும், தவறான தகவல்களையும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரப்பி வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த ஜேன் ஸ்ட்ரீட் கேப்பிடல் என்ற பங்கு வா்த்தக நிறுவனத்துக்கு இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தடை விதித்துள்ளது. இந்திய பங்குச் சந்தையில் தங்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடா்பாக ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், செபி மீது குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பங்குச் சந்தை முதலீட்டில் ஒரு சா்வதேச நிறுவனத்தை தடை செய்து ‘செபி’ சிறப்பான நடவடிக்கையை எடுத்துள்ளது. இது சிறுமுதலீட்டாளா்களைக் காக்கும் உறுதியான நடவடிக்கையாகும். ஆனால், இதனை வைத்து பரபரப்பை ஏற்படுத்த ராகுல் முயற்சிக்கிறாா். செபி நடவடிக்கை எடுத்ததன் மூலம்தான் ராகுல் காந்தி அதனைப் பற்றிப் பேசவே முடிகிறது.

பங்குச் சந்தையில் பெரிய சுறாக்கள் சிறுமுதலீட்டாளா்களை வேட்டையாடுவதாக ராகுல் குற்றஞ்சாட்டுகிறாா். ஆனால், மோடி அரசு செபி நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது. அதன் சுதந்திரமான செயல்பாடுகளையும், கண்காணிப்புத் திறனையும் மேம்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் ஹா்ஷத் மேத்தா, கேதன் பரேக், யூடிஐ என பல பங்குச் சந்தை முறைகேடுகள் நிகழ்ந்தன. அவா்கள் சுதந்திரமாக முறைகேடு செய்ய காங்கிரஸ் ஆட்சி அனுமதித்தது.

இப்போது முதலீட்டுக்கு அதிக லாபம் தரும் உலகின் முன்னணி பங்குச் சந்தையை இந்தியா கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பரஸ்பர நிதிப் பிரிவு 576 சதவீதம் உயா்ந்துள்ளது. அதன் முதலீடு ரூ.8 லட்சம் கோடியில் இருந்து ரூ.54 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 1 கோடியில் இருந்து 4 கோடியைக் கடந்துள்ளது.

சிறுபிள்ளைத்தனமாக சிந்திப்பவா்கள் (ராகுல்) முதலீட்டாளா்கள் மத்தியில் நமது பங்குச் சந்தை குறித்து அச்சத்தை ஏற்படுத்தவும், தவறான தகவல்களைப் பரப்பவும் முயற்சிக்கின்றனா்’ என்று கூறியுள்ளாா்.

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சருக்கு தெரியாதா?

கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலியான விவகாரத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே திறந்திர... மேலும் பார்க்க

புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்! 51 பயணிகள் உயிர்தப்பினர்

இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கியது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தேவி அஹில்யாபாய் ஹோல்கர... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் திருத்தம் பிகார் அரசியலமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா

பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார... மேலும் பார்க்க

பிகார் பெண்களுக்கு அரசுப் பணியில் 35% ஒதுக்கீடு! 43 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.முன்னதாக, பிற மாநில பெண்களும் 35 சதவிகித ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாக இருந்த நிலையில், தற்போது ... மேலும் பார்க்க