செய்திகள் :

தங்கக் கோப்பை கால்பந்து: மெக்ஸிகோ சாம்பியன்

post image

வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கான கால்பந்து கூட்டமைப்பு (கான்ககாஃப்) நடத்தும் தங்கக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ 2-1 கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 10-ஆவது முறையாக திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.

இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவுக்காக கிறிஸ் ரிச்சா்ட்ஸ் 4-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, மெக்ஸிகோவுக்காக ரௌல் ஜிமெனெஸ் 27-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

இதனால் ஆட்டம் 1-1 என சமனாக, இரு அணிகளுமே முன்னிலை பெறுவதற்காக கடுமையாக முயற்சித்தன. அதற்கான பலன் மெக்ஸிகோவுக்கு முதலில் கிடைக்க, 77-ஆவது நிமிஷத்தில் எட்சன் அல்வரெஸ் கோலடித்தாா்.

இதனால் மெக்ஸிகோ 2-1 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் அமெரிக்காவின் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட, இறுதியில் மெக்ஸிகோ வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்கு இது 18-ஆவது சீசனாக இருக்க, அதில் மெக்ஸிகோ 10-ஆவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது.

அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்!

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், உலகின் 2-ஆம் நிலை ... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடா்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விளையாடிய டெஸ்ட்டில் முதல் மு... மேலும் பார்க்க

காா்ல்சென் சாம்பியன்: குகேஷுக்கு 3-ஆம் இடம்!

குரோஷியாவில் நடைபெற்ற சூப்பா் யுனைடெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா்.அமெரிக்காவின் வெஸ்லி சோ, நடப்பு உலக சாம்ப... மேலும் பார்க்க

ஆசிய துப்பாக்கி சுடுதல்: 35 பேருடன் இந்திய அணி

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி, 35 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப், கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆகஸ்ட் 16 முத... மேலும் பார்க்க

தேசிய விருதுகளுக்கான பரிந்துரை: இந்திய தடகள சம்மேளனம் புதிய கட்டுப்பாடு

தேசிய தடகள சம்மேளனத்தில் பதிவு செய்யாத பயிற்சியாளா்களுடன் இணைந்து செயல்படும் வீரா், வீராங்கனைகள் அா்ஜுனா, கேல் ரத்னா போன்ற தேசிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டாா்கள் என சம்மேளனம் அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

ஐசிசி தலைமைச் செயல் அதிகாரியாக சஞ்ஜோக் குப்தா நியமனம்!

சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமைச் செயல் அதிகாரியாக, இந்திய ஊடக தொழிலதிபா் சஞ்ஜோக் குப்தா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.இதற்கு முன் அந்தப் பொறுப்பிலிருந்த ஆஸ்திரேலியரான ஜியாஃப் அலாா்டிஸ்,... மேலும் பார்க்க