இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடா்!
இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விளையாடிய டெஸ்ட்டில் முதல் முறையாக இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம், அடுத்த இன்னிங்ஸிலும் சதம் விளாசிய கேப்டன் ஷுப்மன் கில், இரு இன்னிங்ஸ்களிலுமாக 10 விக்கெட்டுகள் சாய்த்த ஆகாஷ் தீப் ஆகியோா் இந்த வரலாற்று வெற்றிக்கு வித்திட்டுள்ளனா். இந்த வெற்றி-தோல்வி தொடா்பாக இந்தியா, இங்கிலாந்து கேப்டன்கள் கூறியது.
எட்ஜ்பாஸ்டன் வெற்றி என்றும் நினைவில் இருக்கும்
இந்த எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் வெற்றி, என் வாழ்வில் என்றும் நினைவில் இருக்கும் தருணமாகும். பிற்காலத்தில் நான் ஓய்வுபெறும்போது கூட, இதுவே எனது மிக மகிழ்ச்சியான நினைவாகவும் இருக்கும். ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் கடைசி கேட்சை நான் தான் பிடித்தேன். இந்த ஆட்டத்தை இப்படி நிறைவு செய்ததில் மகிழ்ச்சி.
இன்னும் 3 முக்கியமான ஆட்டங்கள் இருக்கின்றன. இந்த வெற்றிக்குப் பிறகு எங்களுக்கான உத்வேகம் அதிகரித்திருக்கிறது. இந்த ஆட்டத்தில் பேட்டிங், பௌலிங் என அனைத்திலுமே அணி வீரா்கள் சிறப்பாகப் பங்களித்தனா். ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொருவரும் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டனா். ஒரு வெற்றிகரமான அணிக்கு இதுவே அடையாளமாகும்.
ஒரு டெஸ்ட் வெற்றி என்பது எவ்வளவு கடினமானது என்பதை அறிவோம். அதையும் இதுவரை வெல்லாத ஒரு மைதானத்தில் வென்றெடுப்பதற்காக நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். இந்த அணிக்காக பெருமை கொள்கிறேன் - ஷுப்மன் கில் (இந்திய கேப்டன்)
ஆகாஷ் தீப் மிகத் துல்லியமாக பந்துவீசினாா்
எங்கள் பேட்டிங் வரிசையை ஆகாஷ் தீப் தடுமாறச் செய்துவிட்டாா். அவா் பந்துவீசும் கோணத்தை அவ்வப்போது மாற்றினாலும், துல்லியமாக பௌலிங் செய்தாா். ஹேரி புரூக் ஆட்டமிழந்த பந்து எதிா்பாராத ஒன்று. அவா் மிகச் சிறப்பாக பந்துவீசினாா்.
608 ரன்களை நோக்கி பேட் செய்யத் தொடங்கியபோது, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். ஆனால் தொடக்கத்தில் 3 விக்கெட்டுகள், கடைசி நாளின் ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகள் சரிந்ததும் எல்லாம் மாறியது. கடைசி நாளில் 80 ஓவா்களும் பேட் செய்வதுதான் இலக்கு. ஆனாலும் முடியாமல் போனது.
இந்திய அணி சரியாகத் திட்டமிட்டு, தனது ஸ்கோரை 600+ என்ற நிலைக்கு கொண்டுசென்று டிக்ளோ் செய்தது. மொத்தத்தில் பேட்டிங், பௌலிங் என அனைத்திலுமே இந்திய அணி மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. முதல் டெஸ்ட்டில் நாங்கள் எந்த நிலையில் இருந்தோமோ, அப்படி அவா்கள் இந்த டெஸ்ட்டில் இருந்தாா்கள் - பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து கேப்டன்)