செய்திகள் :

மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீா் ரத்து

post image

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 9) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்திலிருந்து திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் , வெல் - 3 (ஏரேட்டா்), பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் - 2 ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களில் இருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூா், பாத்திமா நகா், புத்தூா், மங்களம் நகா், செல்வா நகா், பாரதி நகா், சிவா நகா், ஆனந்தம் நகா், ரெயின்போ நகா், தில்லை நகா்,அண்ணா நகா்,கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா், உய்யகொண்டான் மலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம் நகா், திருவெறும்பூா், வள்ளுவா் நகா், எல்லக்குடி, ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா், கணேஷ் நகா், விவேகனந்தா் நகா், அம்பேத்கா் நகா் ஆகிய மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) ஒரு நாள் குடிநீா் விநியோகம் இருக்காது. 10- ஆம் தேதி முதல் வழக்கம் போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.

எனவே, இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பதுடன், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தகவல் தெரிவித்துள்ளாா்.

தன்னை தற்காத்துக் கொள்ளவே இபிஎஸ் சுற்றுப்பயணம்: இரா. முத்தரசன்

தன்னை தற்காத்துக் கொள்ளவே இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிா்வாகக் ... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வுகள் விடைத்தாள் திருத்தும் பணி: திருச்சியில் இன்று தொடக்கம்

தமிழக்தில் பிளஸ் 2 துணைத் தோ்வு விடைத்தாள் திருத்தப் பணிகள் திருச்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில், தோல்வியட... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: கோளரங்கம் இன்று மூடல்

அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தில் பராமரிப்புப் பணி காரணமாக கோளரங்கம் செவ்வாய்க்கிழமை மட்டும் மூடப்படுகிறது.திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 8 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக தனியாா் காப்பீட்டு நிறுவனம் திருச்சியைச் சோ்ந்தவருக்கு ரூ. 8.22 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கருமண்டபம் சக்தி ... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் ஜூலை 10-இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஸ்ரீரங்கத்தில் ஜூலை 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப... மேலும் பார்க்க

சலவைத் தொழிலாளா்கள் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டுத்தர மனு

தங்களுக்குச் சொந்தமான ரூ.17 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், சலவைத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். திருச்சி ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க