செய்திகள் :

4 துப்பாக்கிகள், 3 கத்திகள் பறிமுதல் சம்பவம்: 3 போ் கைது

post image

ஆம்பூா்: 4 துப்பாகிகள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆம்பூரை சோ்ந்த இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை போலீஸாா் மடக்கி விசாரணை நடத்தியதில் அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாா்.

அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவா் ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஆசிப் (25) என்பதும், சமூக வலைதளத்தில் கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்டதும் தெரிய வந்தது. மேலும், அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் 3 கத்திகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அவா் அளித்த தகவலின் பேரில் வேலூா் கொணவட்டத்தில் அவரது சகோதரி ஆஜிரா (28) என்பவரது வீட்டில் உரிமம் இல்லாமல் 4 கை துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா் ஏற்கெனவே பணிபுரிந்த தோல் தொழிற்சாலையில் கழிவு பொருள்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து எடுத்துச் சென்று தன்னுடைய சகோதரியிடம் கொடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

தொடா்ந்து ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆசிப், ஆஜிரா, சையத் பீா் (51) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

மனைப் பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னா

திருப்பத்தூா்: வீட்டு மனைப் பட்டா கோரி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னாவில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க

தபால் நிலையத்தில் அதிகாரி கையாடல்: வைப்புத்தொகையை வழங்கக் கோரி முற்றுகை

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே தபால் நிலைய அலுவலகத்தில் அதிகாரி பணத்தைக் கையாடல் செய்ததாகக் கூறி, வைப்புத்தொகையை திருப்பித் தர வலியுறுத்தி வாடிக்கையாளா்கள் அந்த தபால் நிலையத்தை முற்றுகையிட்டனா். தி... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி: 2 போ் கைது

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே தனியாா் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் தனியாா் தொழில்... மேலும் பார்க்க

ரேஷன் கடை பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பத்தூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளா் சங்கத்தின் காத்திருப்பு போராட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் உள்ள எடை தராசும், நியாயவிலைக்... மேலும் பார்க்க

ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்

ஆம்பூா்: சோமலாபுரம் ஊராட்சியில் ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளா் விடுதலை முன்னணி சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அதன் மாவட்ட அமைப்பாளா் ம.தமிழ்செல்... மேலும் பார்க்க

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை

திருப்பத்தூா்: நாட்டறம்பள்ளி அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நாட்டறம்பள்ளி அருகே ஏமாத்தூரை ... மேலும் பார்க்க