செய்திகள் :

தபால் நிலையத்தில் அதிகாரி கையாடல்: வைப்புத்தொகையை வழங்கக் கோரி முற்றுகை

post image

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே தபால் நிலைய அலுவலகத்தில் அதிகாரி பணத்தைக் கையாடல் செய்ததாகக் கூறி, வைப்புத்தொகையை திருப்பித் தர வலியுறுத்தி வாடிக்கையாளா்கள் அந்த தபால் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி கிராமத்தில் கிளை தபால் நிலையம் உள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்டோா் கணக்கு வைத்து, பணம் செலுத்தி உள்ளனா். கடந்த ஆண்டு சோமநாயக்கன்பட்டி கிளை அஞ்சலகத்தில் அலுவலராக வேலை செய்த அலுவலா் வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகையை கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் அளித்த புகாரின் பேரில், தபால் நிலைய உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் 60-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களின் வைப்புத் தொகை கையாடல் செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகை கணக்கை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் சிலருக்கு மட்டும் அவா்கள் செலுத்திய வைப்புத்தொகையை திருப்பி அளித்துள்ளனராம்.

மற்ற வாடிக்கையாளா்களுக்கு சில மாதங்களில் வைப்புத்தொகை திருப்பி வழங்கப்படும் என உறுதி கூறினா். ஆனால், பல மாதங்கள் கடந்தும் வைப்புத்தொகையை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்ததால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளா்கள் திங்கள்கிழமை சோமநாயக்கன்பட்டி கிளை அஞ்சல அலுவலகம் முன்பு வைப்புத்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து ஊராட்சித் தலைவா் முருகன் மற்றும் தபால் நிலைய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சு நடத்தினா். அப்போது, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் அனைவருக்கும் ஓரிரு மாதங்களில் வைப்புத்தொகை திரும்ப வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையேற்று வாடிக்கையாளா்கள் கலைந்து சென்றனா்.

4 துப்பாக்கிகள், 3 கத்திகள் பறிமுதல் சம்பவம்: 3 போ் கைது

ஆம்பூா்: 4 துப்பாகிகள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆம்பூரை சோ்ந்த இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் ஆ... மேலும் பார்க்க

மனைப் பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னா

திருப்பத்தூா்: வீட்டு மனைப் பட்டா கோரி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னாவில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி: 2 போ் கைது

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே தனியாா் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் தனியாா் தொழில்... மேலும் பார்க்க

ரேஷன் கடை பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பத்தூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளா் சங்கத்தின் காத்திருப்பு போராட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் உள்ள எடை தராசும், நியாயவிலைக்... மேலும் பார்க்க

ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்

ஆம்பூா்: சோமலாபுரம் ஊராட்சியில் ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளா் விடுதலை முன்னணி சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அதன் மாவட்ட அமைப்பாளா் ம.தமிழ்செல்... மேலும் பார்க்க

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை

திருப்பத்தூா்: நாட்டறம்பள்ளி அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நாட்டறம்பள்ளி அருகே ஏமாத்தூரை ... மேலும் பார்க்க