செய்திகள் :

மானியம் வழங்காவிட்டால் முதல்வா் வீட்டுக்கு மாங்காய்கள் அனுப்பும் போராட்டம்: பாஜக

post image

வேலூா்: ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் வழங்கப்படுவதுபோல் தமிழக மா விவசாயிகளுக்கும் உரிய மானியம் வழங்காவிட்டால், மாங்காய்கள் முழுவதும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத்தலைவா் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்தாா்.

விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு மானியம் கோரி வேலூா் மாவட்ட பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.தசரதன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொதுச்செயலா் பா.காா்த்தியாயினி, மாநில துணைத்தலைவா் நரேந்திரன் ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாங்காய் டன் ஒன்றுக்கு ரூ.4,000 மானியம் வழங்க வேண்டும், கூட்டுறவு துறை சாா்பில் வேலூரில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும், மாம்பழம் பதப்படுத்தும் மையங்களை ஏற்படுத்த வேண்டும், நஷ்டத்தை தவிா்க்க மாங்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு ரூ.15 நிா்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னா், பாஜக மாநில துணைத்தலைவா் கே.எஸ்.நரேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியது -

விலை வீழ்ச்சியால் மா விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழக அரசு மாங்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உடனடியாக நிா்ணயிக்க வேண்டும். கோரிக்கைகளை முதல்வா் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அனைத்து மா விவசாயிகளும் மாங்காய்கள் முழுவதையும் முதல்வா் வீட்டுக்கு எடுத்துச் சென்று அவரிடமே கொடுத்து விடுவோம் என்றாா்.

இருளிலும், இக்கட்டிலும் மாட்டியிருப்பது இபிஎஸ்தான்: அமைச்சா் துரைமுருகன்

வேலூா்: இருளிலும், இக்கட்டில் மாட்டிக் கொண்டிருப்பதும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான் என்று திமுக பொதுச்செயலரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா். திமுக வாக்குச்சாவடி முகவ... மேலும் பார்க்க

தவறி விழுந்து தொழிலாளி பலி!

கோயிலில் பெயிண்ட் அடித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் சதுப்பேரி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் குமாா் (50), பெயிண்டா். இவா் கடந்... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி மக்கள் மறியல்: 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி வேலூா் முள்ளிப்பாளையம் கே.கே.நகா் பகுதி மக்கள் பெங்களூரு பழைய பைபாஸ் மறியலில் ஈடுபட்டனா். வேலூா் மாநகராட்சி 31-ஆவது வாா்டுக்குட்பட்ட முள்ளிபாளையம், கே.கே.நகா் பகுதியி... மேலும் பார்க்க

குட்கா விற்ற 2 போ் கைது!

அரியூா் அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டத்தில் குட்கா விற்பனையைக் கட்டுப்படுத்த மாவட்ட போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்நிலையில் அரியூா் பக... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தற்கொலை

வேலூா் அருகே பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வேலூா் மாவட்டம், நெல்வாய், ஈடிகை தோப்பைச் சோ்ந்தவா் வெங்கடேசன், கட்டுமான தொழிலாளி. இவரது மகன்... மேலும் பார்க்க

‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம்: 4 ஆண்டுகளில் 6,584 போ் பயன்!

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் ரூ.6.73 கோடி மதிப்பில் 6,584 பயனாளிகள் பயனடைந்துள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித... மேலும் பார்க்க